states

புனலூர் - செங்கோட்டை ரயில்பாதை மின்மயமாக்கல் பணி இன்று தொடக்கம்

கொல்லம், மே 8- நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, கேரளாவில் இருந்து புனலூர் - செங்கோட்டை ரயில்  பாதை மின்மயமாக்கல் பணி  திங்கள் (மே 9) முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் செங் கோட்டை மற்றும் பகவதிபுரம் இடையே மின்மயமாக்கும்  பணி கடந்த ஏப்ரல் மாதம் துவங் கியது. இங்கு மின்கம்பங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. கேர ளத்திலும் தமிழகத்திலும் ஒரே நேரத்தில் பணிகள் நடப்ப தால், விரைவில் இப்பணி நிறைவு பெறும். புனலூர் - செங்கோட்டை ரயில் பாதை யை மின்மயமாக்க 61.32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. 2023 பிப்ரவரிக் குள் பணிகளை முடிக்க ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை யின் ஒரு பகுதியாக இருப்ப தாலும், பல சுரங்கப் பாதைகள் மற்றும் பாலங்களை உள்ள டக்கியதாலும் இது சவாலான பணி. ஆனால், இரண்டு மாதங்  களுக்குள் முன் மின்மய மாக்கல் முடிந்து, பாதுகாப்பு ஆணையரின் அனுமதி கிடைத்ததும், புனலூர்-கொல் லம் வழித்தடத்தில் மின்சார இன்ஜின் இயக்கப்படுமா என்பதை ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை.