states

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மின்சார வாரியத்தின் நேரடி லிங்க்

சென்னை, டிச. 7- தமிழ்நாட்டில் உள்ள வீடு,  கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் தங்க ளது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் மின்  இணைப்பு எண்ணுடன் ஆதார்  இணைப்பதற்காக மின்நுகர்வோ ரின் செல்போன் எண்களுக்கு மின் வாரியம் குறுந்தகவல் அனுப்பி யது. நேரடியாக மின் கட்டணம் செலுத்துபவர்கள், ஆதார் அட்டை யின் நகலை எடுத்து சென்று ஆதார்  எண்ணை இணைத்துக் கொள்ள லாம் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, ஆதார் இணைப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடையே நிலவியது. குறிப்பாக 100 யூனிட் இலவச மின் திட்டம் நிறுத்தப்படுமா, மின் கட்டணம் செலுத்த முடியாமல் போகுமா என மின்நுகர்வோர் குழப்ப நிலையில் இருந்தனர். பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மின் கட்டண அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 2,811 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டன. இதில், பொதுமக்கள் நேரடியாக வந்து ஆதாரை இணைத்துக் கொள்ள லாம் என மின்துறை அறிவித்தது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் ஆதாரை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது. ஆன்லைன் இணைப்புக்காக மின்வாரிய இணையதளத்தை பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் அடிக்கடி அந்த பக்கத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் இணையப்பக்கம்  புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் எளிமையாக ஆதாரை இணைக்கும் பக்கத்துக் குச் செல்ல நேரடி லிங்கை மின்வாரி யம் வெளியிட்டுள்ளது. அதன்படி bt.ly/linkyouraadhar என்ற இணையதளத்தில் ஆதாரை இணைக்கலாம். இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் டிவிட்டரில் குறிப் பிட்டுள்ளது.