states

குறைந்தபட்ச ஊதியம் வழங்குக!

திருச்சிராப்பள்ளி, பிப்.21- தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் தொழி லாளர் சங்க மாநில நிர்வாகக்குழு கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் எஸ்.ஜெயசங்கர் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பி.கே.கந்தசாமி, மாநில துணைத்தலைவர் டி.கோவிந்தராஜ், சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் முன்னால் உள்ள சவால்கள்  என்ற  தலைப்பில்  சி.ஐ.டி.யு துணைப் பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் பேசினார்.   கூட்டத்தில் மின் இணைப்பு பணி யாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதி யத்தை நிரந்தரம் செய்ய வேண்டும், பணியின் போது விபத்து ஏற்பட்டு இறக்க நேரிட்டால் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும், ஏப்ரல் 5. அன்று தில்லியில் நடைபெறும் பேரணியில் பெருந்திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.