வாக்குமூலம் அளித்தவர்கள் ஒத்துழைக்காததால் நடவடிக்கைகள் நிறுத்தம்
கேரள அரசு தகவல் நீதிபதி ஹேமா குழு அறிக்கை
திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆய்வு செய்த நீதிபதி ஹேமா குழு அறிக்கையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து குற்ற வழக்குக ளிலும் நடவடிக்கைகள் நிறுத்தப் பட்டுள்ளதாக கேரள அரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் வி.மனு, வாக்குமூலம் அளித்தவர்கள் ஒத்துழைக்காததால் இது நடந்ததாகத் தெரிவித்தார். மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் ஒரு வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. மீதமுள்ள 34 வழக்குக ளில் மேல் நடவடிக்கைகள் நிறுத்தப் பட்டுள்ளன. யாரையும் வாக்குமூலம் அளிக்க கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது. அதே நேரத்தில், புகார்களைப் பெற காவல் துறையின் நோடல் அலுவலகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஹேமா குழுவில் வாக்குமூலம் அளித்தவர்களும், திரைப்படத் துறையி லிருந்து பாலியல் சுரண்டல் அல்லது தவறான அணுகலை எதிர்கொண்டவர்க ளும் புகார்களை அளிக்கலாம் என்று முன்னர் தெளிவுபடுத்தப்பட்டது. திரைப் படத் துறைக்கான சிறப்புக் கொள்கை மற்றும் சட்டத்தை உருவாக்கும் நோக்கில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் திரைத்துறை மாநாடு நடத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது. இதையடுத்து, நீதிபதிகள் ஏ.கே. ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் நீதிபதி சி.எஸ். சுதா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, மனுக்களை பின்னர் பரிசீலிக்க ஒத்திவைத்தது. 2022 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திரை உலகின் பல்வேறு பிரிவுகளில் அமைக் கப்படும் உள் குறை தீர்க்கும் குழுவின் சுமூகமான செயல்பாட்டிற்கு வழிகாட்டு தல்கள் தேவை என்று மகளிர் ஆணைய வழக்கறிஞர் ஏ. பார்வதி மேனன் சுட்டிக்கா ட்டினார். இந்த பிரச்சனையை எழுப்பி முன்னதாக ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது. இந்த விசயங்களையும் நீதி மன்றம் ஆராயும். இந்தக் குழுவை மேற் பார்வையிட கேரள திரைப்பட வர்த்தக சபை மகளிர் ஆணையத்தின் தலைமை யில் 27 பேர் கொண்ட குழுவை அமைத் திருந்தது.