states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சென்னையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை சென்ற மின்சார ரயில், கிண்டி அருகே வந்தபோது பிரேக் பாயிண்டில் ஏற்பட்ட பழுது காரணமாக திடீரென ரயில் பெட்டியில் கரும்புகை  ஏற்பட்டது. இதனால் ரயிலில் இருந்த  பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். பின்னர் ரயில் பெட்டியில் இருந்த பழுது சரி செய்யப்பட்டு, தாம்பரம் எடுத்துச் செல்லப்பட்டது.

ராகுல் காந்தி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரவீன் ராஜை, அக்டோபர் 13 வரை நீதி மன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நீதிமன்ற  நீதிபதி சுஜாதா உத்தரவிட்டார்.

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழக விஜிலன்ஸ் டிஜிபி ஆக உள்ள பி.கே.ரவி, விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். 1989  பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான ரவி அரசியலில்  இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது. 

ஆந்திராவில் விநாயகர் ஊர்வலத்தில் தீ வைத்து நடனமாடிய போது ஏற்பட்ட விபத்தில் 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாய மடைந்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் பகுதியில் சாலையில் பழுதாகி நின்ற லாரியில் இருந்து ஒரு டன்  அளவிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நான்கு ஆண்டுகளாக அதிமுகவை காப் பாற்றிய பாஜகவுக்கும் எடப்பாடி விசுவாச மாக இல்லை என அமமுக தலைவர் டிடிவி தின கரன் குற்றச்சாட்டியுள்ளார்.

கனமழை காரணமாக திருமலை நம்பி கோயி லுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது.