ரஷ்யா-உக்ரைன் மோதலால் ஆப்பிரிக்க நாடு களின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தங்கள் விவசாயப் பொருட் கள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உரங்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் இருந்துதான் இறக்குமதி ஆகின்றன. தற்போதைய மோதலால் உரங்களை அங்கிருந்து முன்புபோல் பெற முடியா மல் போயிருக்கிறது. இது ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரக் கடுமையாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருந்த 30 கனிமச் சுரங்கங்களை பெரு அரசு இழுத்து மூடியுள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை இந்த சுரங்கங்களை இயக்கி வந்த நிறுவனங்கள் ஏற்படுத்தி வந்தன. கோடிக்கணக் கான டாலர்களை வருமானமாகப் பெற்று வந்த இந்த நிறுவனங்கள் அரசிற்கு எந்தவித கட்டணமோ அல்லது வரியோ செலுத்தவில்லை. முந்தைய வலதுசாரி அரசின் ஆதரவு இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிற்கு ஜூலியன் அசாங்கேவைக் கடத்தும் நடவடிக்கைக்கு தடையில்லை என்ற நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக பிரிட்டன் அர சிடம் கோரிக்கை வைக்கப் போவதாக அவருடைய வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் கார்லோஸ் போவெதா, “அசாங்கேயை நாடு கடத் தினால் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாக அமைந்துவிடும்” என்று கூறியுள்ளார்.