states

முடங்கியது சரக்குப் போக்குவரத்து

சியோல், ஜூன் 10- தென் கொரியாவில் சரக்குப் போக்கு வரத்து வாகனங்களின் ஓட்டுநர்கள்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் எண்ணெய் விலை க்கு எதிராக ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுநர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். எண்ணெய் விலை  உயர்வால் அத்தியாவசியப் பொருட் களின் விலைகளும் கடுமையாக அதி கரித்துள்ளன. தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சியோக் யூல் பொறுப்பேற்று ஒருமாத காலம்தான்  ஆகியுள்ளது. இந்த வாகன ஓட்டு நர்களின் வேலை நிறுத்தம் அவரது முதல் சவாலாக உருவெடுத்திருக்கிறது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 200 என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதைவிடப் பெரும் அளவில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தொழிற்சங்கங்கள் தெரி வித்துள்ளன.