states

ஆளுநருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதா?: வைகோ கேள்வி

சென்னை,ஜுலை 1- அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு வானளாவிய அதிகாரம் வழங்கி உள்ளதா? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்திருக் கும் அறிக்கையில்,“ தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில்  பாலாஜியை நீக்கி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் தெரிவித் திருக்கிறார். அக்கடிதத்தில், அரசி யலமைப்பு சட்டத்தின் 154, 163, 164  ஆகிய பிரிவுகளின் கீழ் அமைச்சரை  பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தனக்கு உண்டு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டிருக்கிறார். ஆளுநர் குறிப்பிட்டு இருக்கிற சட்டப்பிரிவுகளின் கீழ் வானளாவிய அதிகாரம் எதுவும் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. அரசியல் சட்டப் பிரிவு 154 இன்  படி, மாநிலத்தின் நிர்வாக அதிகாரம்  ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தாலும், 154(2- ஆ)பிரிவு,  மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் அதன் சட்டம் இயற்றும் அதிகார  அமைப்பான மாநில சட்டமன்றத் திற்கு உட்பட்டுதான் இருக்கும் என்று தெளிவாக கூறுகிறது. ஆளுநர் தனது பணிகளை நிறைவேற்றும் போது ஒரு சில  விதிவிலக்குகள் தவிர அனைத்தி லும் அமைச்சரவையின் உதவியுட னும் ஆலோசனையுடனும் தான் செயல்பட வேண்டும் என்று குறிப் பிடுகிறது. அரசியலமைப்பின் 42ஆவது  திருத்த சட்டத்தின் மூலம் அமைச் சரவையின் ஆலோசனைப்படியே குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும் என்று பிரிவு 74 இல் திருத்தம் செய்யப்பட்டது.

அதேபோல ஆளுநரும் செயல்பட வேண்டும் என்று பிரிவு 163 இல் உரிய திருத்தங்கள் செய்யப்படவில்லை. எனினும் பொதுவாக தமது அமைச்சர்களின் ஆலோசனைப்படி அல்லாமல் ஆளுநர் செயல்படக் கூடாது என்று  உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் சட்ட பிரிவுகளை துணைக்கு அழைத்து, தன்னிச்சையாக அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தமக்கு இருப்பதாக கடிதம் எழுதி இருப்பது ஏற்கத்தக்கதல்ல. முதலமைச்சரின் பரிந்துரை இன்றி ஆளுநர் இப்படி ஒரு அமைச்சரை நியமிக்க முடியாது, அதைப்போலவே தன்னிச்சையாக நீக்கவும் முடியாது என்பது தெளி வாகிறது. அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளையும் மரபுகளை யும் தொடர்ந்து மீறி வரும் ஆர். என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார். தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் விளைவிக்க முனைந்து  வரும் தமிழ்நாடு ஆளுநர் உடனடி யாக திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். ராஜினாமா செய்ய வேண்டும்: கி.வீரமணி அரசியல் சட்டத்துக்கு விரோத மாக செயல்படும் ஆளுநர் உடனடி யாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் ராஜினாமா செய்ய தவறும் பட்சத்தில் அவரை குடி யரசுத்தலைவர்பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.