சென்னை,ஏப்.21- உதவித்தொகை வழங்குவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாரபட்சம் காட்டவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிக ளுக்கான உதவித்தொகையை அதிகரித்து வழங்குவது தொடர்பாக நேத்ரோதயா என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது சொற்ப அளவிலான உதவித்தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமா னப்படுத்த வேண்டாம் என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். உதவித்தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உதவித் தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை என தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உத்தரவிட்ட னர். இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற் றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உத வித் தொகை குறித்து விளக்கம் அளித் தார். சமூக நலத்துறை முதன்மை செய லாளர் விசாரணைக்கு நேரில் ஆஜரா வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டது. ஆனால் விலக்கு அளிக்க நீதிபதி கள் மறுத்துவிட்டனர். உதவித்தொகை உயர்த்தி வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கும்படி அறிவு றுத்திய நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.