பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரும், செர்பிய நாட்டவருமான ஜோகோவிச், முக்கிய டென்னிஸ் நட்சத்தி ரங்களில் ஒருவரான ஸ்பெயி னின் நடாலை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4:12 மணிநேரம் போராடி ஸ்பெயினின் நடால் 6-2,4-6, 6-2,7-6(7-4) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னே றினார். கொரோனா தடுப்பூசி, பார்ம் உள்ளிட்ட பல்வேறு பிரச்ச னைகளால் திணறி வந்த ஜோகோவிச் நீண்ட காலத்திற்கு பிறகு 4 மணிநேரம் போராடியுள் ளார். இதில் தோற்றாலும் ஆட்ட திறனில் பழைய அதிரடி யை துவங்கியுள்ளார் ஜோகோவிச்.