states

img

அக்.3, 4-இல் மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாடு

சென்னை,செப்.14-  மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் நடை பெற உள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறி விப்பு வருமாறு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வனத்துறை அதிகாரி கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்டஆட்சியர்கள், காவல் துறை, வனத் துறை  அதிகாரிகள், அரசு உயர் அதி காரிகள் கலந்துகொள்வார்கள்.  2 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் -ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல் வர் விரிவாக ஆய்வு மேற் கொள்வார். கடந்த 2 ஆண்டு களில் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் விதமாக அரசு பல் வேறு புதிய அறிவிப்புகள், திட்டங்களை அறிமுகப் படுத்தி செயல்படுத்தி வரு கிறது. இத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றை மேலும் சிறப்பாக செயல் படுத்துவது குறித்து அதிகாரி களுக்கு பல்வேறு அறிவுரை களை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெற உள்ளது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.