states

வேலன்செட்டியூரில் தீண்டாமைக்கு எதிராக தலையீடு

சென்னை,செப்.10- வேலன் செட்டியூரில் தீண்டாமைக்கு எதிராக தலையிட்ட கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து முன்னணியின்  மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செய லாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் கரூர் மாவட்ட ஆட்சியருக்கு  எழுதியுள்ள கடிதம் வருமாறு:   கரூரில் அரவக்குறிச்சி ஒன்றியம் வேலன் செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அருந்ததியர் பெண்மணி சமைத்த உணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என்று பெற்றோர் சிலர் சாதிய ரீதியாக எதிர்ப்பு தெரிவித்த பிரச்சனையில். தங்களின் உடனடி தலையீட்டிற்காகவும், தீர்வு காண முயற்சி எடுத்தமைக்காகவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பாராட்டுக்களை உரித்தாக்குகிறோம்.  தீண்டாமை, வன்கொடுமை பிரச்சனை களில் இத்தகைய உரிய தலையீடு  பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் வழியை ஏற்படுத்தும்.  புகார் தங்கள் கவனத்திற்கு வந்தவுடன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படும் என எச்சரித்ததும், நேரடியாக சம்பந்தப் பட்ட பெற்றோரை அழைத்துப் பேசி அவர்களை கண்டித்ததும், அவர்கள் மன்னிப்புக்கேட்டு இருப்பதும் உரிய காலத்தில் நடந்தேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.  இருப்பினும் இன்னும் ஒரு சில குழந்தை களை உணவு அருந்த அவர்களின் பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை என்ற தகவல்கள் எங்களுக்கு வந்துள்ளன.   அரசு நிர்வாகத்தின் முயற்சி முழுப் பயனை தரவேண்டுமென விழைகிறோம். எனவே சில வாரங்களாவது நேரடி அலு வல் ஆய்வை மேற்கொண்டும், தினசரி  அறிக்கையை அப் பள்ளி தலைமை ஆசிரி யரிடமிருந்து பெற்றும் உரிய நடவடிக்கை எடுத்து இந்த தீண்டாமை பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்குமாறு கேட்டுக்கொள் கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.