சென்னை, ஏப். 23 - சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கையில் சத்துணவு ஊழியர்க ளுக்கு எந்தவித அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை யும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என்று சத்துணவு ஊழியர் சங்கம் தெரிவித் துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.கலா, பொதுச்செயலாளர் அ.மலர் விழி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 39 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக சத்துணவு திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பணி யாற்றும் ஊழியர்களை, பகுதிநேர நிரந்தர ஊழி யர்களாக அறிவித்து சிறப்புகாலமுறை ஊதி யத்திலும், சிறப்பு ஓய்வூதியமும் என்ற பெயரில் 2 ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியமும் வழங்கப்படு கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் கடுமையாக போராடியும் கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வந்தது. திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் வ.எண்.313ல் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணியமர்த்தி அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும், குறைந்த பட்ச ஓய்வூதியமும், பணிக்கொடையும் வழங்கப் படும் என்ற அறிவிப்பு செய்யப்பட்டது.
ஆனால், ஆட்சி பொறுப்பேற்று 11 மாதம் ஆனபிறகும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை உள்ளது. ஆகவே, காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை, காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வலியுறுத்தி ஏப்.12 அன்று தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தினோம். அதனைத் தொடர்ந்து ஏப்.19 அன்று சென்னையில் பெருந்திரள் முறையீடு இயக்கத் தையும் நடத்தினோம். இந்நிலையில் ஏப்.21 அன்று சட்ட மன்றத்தில் சத்துணவு மற்றும் சமூக நல மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில், சமூக நலத் திட்டத்தின் அடிப்படையில் மகளிருக்கு சலுகைகளும் பாதுகாப்பும் அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் ஊழியர்களுக்கு எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது ஊழியர்கள், ஓய்வூதியர்கள் இடையே பெருத்த ஏமாற்றத்தை யும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, முதலமைச்சர் சத்துணவு ஊழியர்க ளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.