சென்னை,ஏப்.12- மதுரை சித்திரை திருவிழாவுக்கு தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள விரிவான ஏற்பாடுகள் குறித்து சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் செவ்வா யன்று(ஏப்.11) கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வி எழுப்பிய அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதய குமார், “மதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவுக்கு அரசு என்னென்ன ஏற்பாடுகளை செய்துள் ளது” என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு,“ வருகிற 14 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள திருவிழாவுக்கு பாதுகாப்பை பலப்படுத்த 20 இடங்க ளில் தானியங்கி கேமராக்கள் பொருத் தப்பட்டுள்ளன. 40 இடங்களில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவை செய்யப் பட்டுள்ளது.
மருத்துவ உதவி தேவைப்படு கிறவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படுத்தப்பட வுள்ளன. கூட்ட நெரிசலைக் கட்டுப் படுத்துவதற்கும், அதை ஒழுங்கு படுத்து வதற்கும் சுமார் 3,000 காவலர் கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நோய்த் தொற்றுப் பரவாமல் இருக்க மதுரை மாநகராட்சியின் உதவியோடு, சுகாதாரப் பணியாளர்களை நியமித்து குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 50 இடங்களில் குடிநீர் வசதிகள் செய்துதர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 இடங்களில் கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்படும் பணி களை கவனிப்பதற்கு இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையாளர் கண்ணன் அங்கு பணியில் இருக்கிறார். சித்திரை திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் அனைத்து தேவைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு தேவையான தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது” என்றார்.