சென்னை, ஜூலை 27- ‘நெய்வேலி கால்வாய் அமைப்பது’ என்ற பெயரில் வளையமாதேவி, மேல்பாதி யில் சாகுபடி பயிர்களை அழித்த செயலுக்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கண்டனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நெய்வேலி சுரங்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் விவசாயிகளின் அனுபவத்தி லேயே இன்று வரை உள்ளது. விளை நிலங்களில் நெல் உள் ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப் பட்டுள்ள நிலையில் கால்வாய் அமைப்பதற்காக நூற்றுக்கணக் கான போலீஸ் பாதுகாப்புடன் சாகுபடி பயிர்களை அழித்துள்ள னர். அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் வயல்களை அழித்து என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம், கால்வாய் அமைக்கும் பணி களை மேற்கொள்வதை தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. என்.எல்.சி சுரங்க விரிவாக் கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு வழங் கப்பட்ட இழப்பீடு மிகவும் குறை வாக உள்ளதாகவும், கூடுதல் இழப்பீடு வேண்டும் என்று விவ சாயிகள் கேட்டு வருகின்றனர். மாநில அரசும் என்.எல்.சி நிர்வா கமும் விவசாயிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கூடுதல் இழப்பீடு வழங்கிட வேண்டும், கூடுதல் இழப்பீடு வழங்குகிற வரை விவசாயி கள் நிலத்தை கையகப்படுத்தக் கூடாது. சேதப்படுத்திய பயிர் களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும். கால்வாய் அமைக்கும் பணிகளை உடனடி யாக நிறுத்திட வேண்டும். சாகு படி பயிர்களை அறுவடை செய்யும் வரை விரிவாக்கப் பணி களை மேற்கொள்ளக் கூடாது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு மாநில அரசையும், என்.எல்.சி. நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.