states

உள்நோக்கம் கொண்ட தேசிய மருத்துவ ஆணைய நடவடிக்கைக்கு சிபிஎம் கண்டனம்

சென்னை,மே 28- தமிழகத்தில் புகழ்மிக்க மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை சொத்தை காரணங்களைக் கூறி  ரத்துசெய்த, உள்  நோக்கம் கொண்ட  தேசிய மருத்துவ ஆணை யத்தின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டில் 3 மருத்துவக் கல்லூரி களின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை தேசிய மருத் துவ ஆணையம் வெளியிட்டது, மாணவர் சேர்க்கையும் இதனால் தடைபட்டுள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

இந்தியாவிலேயே அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுள்ள தமிழ்நாடு, மருத்துவ சேவையிலும், மருத்து வக் கல்வியிலும் சிறந்து விளங்குகிறது.  இந்த நிலையில், சென்னையில் செயல்  படும் புகழ்பெற்ற ஸ்டான்லி அரசு மருத்து வக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவ நாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவைகளில் - வருகைப் பதிவினை ஆதாருடன் இணைக்க வில்லை, சி.சி.டி.வி காட்சிகளை இணையம் வழியாக பார்க்க முடியவில்லை என்ற கார ணங்களை சொல்லி அங்கீகாரம் ரத்து செய்வதாக தேசிய மருத்துவ ஆணையம் சொல்கிறது, மாணவர் சேர்க்கையும் தடைபட்டுள்ளது. இந்த முயற்சி தமிழ்நாட் டின் மருத்துவக் கல்லூரி கட்டமைப்பை அவமதிக்கும் செயல் என்பதுடன், மாநில நிர்வாகத்தினை கிள்ளுக்கீரையாக கருதும் அதிகாரக் குவிப்பு போக்கும் அதில் வெளிப்படுகிறது.  அங்கீகாரம் ரத்து பற்றிய தனது அறிக்கை யை தேசிய மருத்துவ ஆணையம் உடனடி யாக திரும்பப் பெற வேண்டும். மாநில அர சாங்கத்தின் பதில்களை ஏற்பதுடன் – கண்காணிப்பு நடவடிக்கைகளை மத்தி யப்படுத்தும் அவசியமற்ற, சாத்தியமற்ற முயற்சிகளை ஒன்றிய அரசாங்கம் திரும்பப் பெற்றிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.