states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஜனநாயகம் வென்றுள்ளது : மல்லிகார்ஜூன கார்கே

ராகுல் காந்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதும், காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், “ஜனநாயகம் வென்றுள்ளது.. ராகுல் காந்தி உண்மைக்காகப் போராடினார்.. மேலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,000 கி.மீ. நடந்து சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தார். பொதுமக்கள் அளித்த ஆசீர்வாதம்தான் எங்களுக்கு இந்த தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது. ராகுல் காந்தியைத் தகுதி நீக்கம் செய்யும் போது அவர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். வெறும் 24 மணி நேரத்தில் அவர்கள் தகுதி நீக்கம் எல்லாம் செய்தனர். இப்போது பார்க்கலாம் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று..  உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இப்போது அவரை மீண்டும் பதவியில் அமர்த்த எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்” என்று அவர் தெரிவித்தார். 

துணை நின்ற அனைவருக்கும் நன்றி : ராகுல் காந்தி

கார்கே-வைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “உண்மை வெல்லும் என்பதையே இது காட்டியுள்ளது. எனது பாதை தெளிவாக உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எனக்குத் தெளிவு உள்ளது. எங்களுடன் நின்ற அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் அளித்த ஆதரவுக்கு நன்றி” என்று ரத்தினச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். 

ஜனநாயகம் மீது நம்பிக்கையளிக்கும் தீர்ப்பு : ஸ்டாலின்

“நீதி வெல்லும்! வயநாடு தொகுதியை தக்கவைக்கிறார் ராகுல் காந்தி. அவதூறு வழக்கில் அன்பு சகோதரர் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். இந்த முடிவு நீதித்துறையின் வலிமை, ஜனநாயகத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தில்லியில் உள்ளோம்; தமிழ்நாட்டில் இல்லை அன்புமணி விநோதம்

மதுரை, ஆக. 4 - தில்லியில் பாஜக தலைமையி லான என்டிஏ கூட்டணியில் தொடர் கிறோம்; அதேநேரம் தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணியில் தாங்கள் இல்லை என பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரை யில் வெள்ளியன்று செய்தியாளர் களுக்கு அவர் பேட்டியளித்துள் ளார். அதில், “தில்லியில் தேசிய ஜன நாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கவில்லை. 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாமக ஒரு மித்த கருத்து கொண்ட கட்சிகளு டன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைக்கும். அதற்கேற்ப யூகங் களை வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலின் போது எடுப்போம்” என்று கூறியுள்ளார். 

அரசு கல்லூரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு

திருச்சி,ஆக.4- தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தேர்தல் திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் திருச்சி திருவெறும்பூர் கல்லூரி பேராசிரி யர் பி.டேவிட் லிவிங்ஸ்டன் மாநிலத்தலைவராகவும், சிவகாசி அரசு கலை -அறிவியல் கல்லூரி பேராசிரி யர் சோ.சுரேஷ் பொதுச் செயலாளராகவும், இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரி பேராசிரி யர் ப.பிரகாஷ் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாநில துணைத்தலைவர் (பொது) பதவிக்கு, திருச்சி தந்தை பெரியார் அரசு கலை-அறிவியல் கல்லூரி பேராசிரியர் ஆ.கோபாலகிருஷ்ணன் , துணைத்தலைவர் (மகளிர்) பதவிக்கு  வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கல்லூரி பேராசிரியர் து.மதுரம், இணைச் செய லாளர் (பொது) பதவிக்கு பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி பேராசிரியர் சு.மஞ்சுநாதன், இணைச்செயலாளர் ( மகளிர்) பதவி க்கு மதுரை மீனாட்சி அரசு கல்லூரி  பேராசிரியர் ச.துர்காதேவி  ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  அன்று மாலை நடைபெற்ற பொதுக்குழுவில் இவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.7,500  ஊக்கத் தொகை

கல்லூரி மாணவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தின் கீழ், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாகத் தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.7,500 வழங்குவதற்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும், முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குத் தயாராவதற்காக ரூ.25,000 ஊக்கத்தொகை யும் வழங்கப்படும். மதிப்பீட்டுத் தேர்வின் வாயிலாக தேர்வுசெய்யப்பட உள்ள 1,000 மாணவர்களில் 21-22 வயது கொண்ட புதிய ஆர்வலர்கள் 50 பேருக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது. மதிப்பீட்டுத் தேர்வுக்கு https://nmcep.tndge.org/apply_now என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 17.08.2023 ஆகும். 

வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாநகராட்சியில் 227 பேரும், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் 84 பேரும், பேரூராட்சிகள் இயக்கு நரகத்தில் 10 பேரும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் 130 பேரும் என மொத்தம் 451 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில்பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக10 பேருக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை, ஆக.4- தென்மேற்கு பருவமழையின் தீவிரம் கேரளா, கர்நாடகத்தில் குறைந் துள்ளது. மேலும், கடல் காற்று திசை மாற்றம் காரணமாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக4) அதிகபட்சமாக 104 டிகிரி வரைக் கும் நீடித்தது. ஓரிரு இடங்களில் இயல்பி லிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும்  இருந்தது. குறிப்பாக சென்னையில் வெப்பத் தின் அளவு மேலும் 4 நாட்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.  சனிக்கிழமை (ஆக.5) 4 டிகிரி செல்சி யஸ் கூடுதல் வெப்பம் தாக்கம் ஏற்பட  வாய்ப்புள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. 

சென்னை மாரத்தானில் 73,206 பேர் பங்கேற்பு 

சென்னை, ஆக.4- சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) நடைபெறும் கலைஞர் கருணா நிதி நூற்றாண்டு மாரத்தானில் 73,206 பேர் பங்கேற்க உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செய்தி யாளர்களுக்கு பேட்டியளிக் கையில்,“ கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சென்னையில் கலைஞர் நினைவிடத்தில் துவங்குகிறது. இதில் 73,206 பேர் பங்கேற்க உள்ளனர்.   1,063 திருநங்கைகள், திருநம்பிகள் கலந்துகொள்கின்றனர். இது கின்னஸ்  சாதனை பட்டியலில் இடம்பெறும்” என்றார். மாரத்தானில் கலந்து கொள்வோ ருக்காக அதிகாலை 3.30 மணி முதல் மதியம் 12.30 வரை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க கூப்பன்  வழங்கப்பட்டுள்ளது என்றும் மாரத்தான்  போட்டிக்கான பரிசுகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தீவுத்திடலில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

உணவகங்களில்  புகைக் குழல்   கூடத்திற்கு தடை: அரசிதழ் வெளியீடு

சென்னை, ஆக.4- உணவகங்களில் புகை குழல் கூடத் திற்கு (உக்கா) தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உணவுக் கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகை குழல் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலை யில், தற்போது அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது. சாராயம், மதுபானம் ஆகிய கடை களை தவிர்த்து புகைக்குழாய் கூடம்  எங்கும் திறக்கக்கூடாது என அரசிதழில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் விதி முறைகளை மீறி இருந்தால் புகைக் குழல் கூடத்தில் உள்ள பொருட்கள் பறி முதல் செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது. மேலும், விதிகளை மீறி புகைக் குழாய் கூடம் நடத்தினால் ஓராண்டு  முதல் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக் கப்படும், ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.