மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையமான சுர்ஜித் பவனில் நடந்த கருத்தரங்கை தில்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது. இங்கு நடந்த ‘V20’ vs ‘G20’ கருத்த ரங்கம் தடுக்கப்பட்டது. கருத்தரங்கில் பங்கேற்க வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சுர்ஜித் பவன் முன்பு காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். கட்டிடத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. இதில் பங்கேற்க வந்தவர்களிடம் காவல்துறை யினர் அத்துமீறி நடந்து கொண்டனர். சுர்ஜித் பவன் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி குறித்து தகவல் தெரி விக்க வந்த கைரளி செய்தி குழுவை காவவ்துறையினர் தடுத்து நிறுத்தினர். கருத்தரங்கிற்கு முன்அனுமதி பெற வில்லை என்று கூறி காவல்துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ‘வி 20’ மூன்று நாள் கருத்தரங்கு வெள்ளி யன்று (ஆக.18) தொடங்கியது. மேதா பட்கர், பேராசிரியர் அருண்குமார், பிருந்தா காரத், ஜெயதிகோஷ் உள் ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தனர். கருத்தரங்கை முடக்கும் செயல் எதேச்சதிகாரமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தெரி வித்தார். ஜனநாயகத்தை கொல்லும் நிகழ்ச்சி நடக்கிறது என்று மத்தியக் குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி கூறினார்.