states

அயோத்தி சாமியாருக்கு சிபிஎம் கண்டனம்

கிரிமினல் வழக்குப் பதிந்து  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்  தாளர்கள் மற்றும் கலைஞர்  கள் சங்கம் சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்  டில் தமிழக இளைஞர் நலன்- விளை யாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் பேசியதை திரித்து ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகின்றன. ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா, நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்  ளிட்ட உயர் பொறுப்புகளில் உள்ள வர்களே உண்மைக்கு மாறாகப் பேசி தேவையற்ற சர்ச்சையை உரு வாக்கி வருகின்றனர். இது வன்மை யான கண்டனத்திற்கு உரியது. இந்நிலையில், அயோத்தி யைச் சேர்ந்த சாமியார் பரம கம்ச ஆச்சாரியா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  படத்தை கத்தியால் குத்தியும், தீ யிட்டு எரித்தும் மிரட்டியுள்ள தோடு, அமைச்சரின் தலையை  சீவிக்கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என்று கொலை மிரட்டல் விடுத்துள் ளார்.

இதற்கு பரவலான கண் டனம் எழுந்துள்ளபோதும், தேவைப்பட்டால் பரிசுத்தொகை யை அதிகரிக்கத் தயார் என்று அவர்  மேலும் மிரட்டியுள்ளார். ஒரு  கருத்தை கருத்தால் எதிர்கொள்வ தற்கு பதிலாக படுகொலை செய்ய  அறைகூவல் விடுப்பது பாசிச தன்மை வாய்ந்த கிரிமினல் செயல்  ஆகும். ஒரு மடாதிபதியே கொலை  வெறியைத் தூண்டும் கிரிமினல் குற்றவாளியாக நடந்து கொள்வது மிக வெட்கக் கேடானது ஆகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு மாநிலச் செயற்குழு இச்  செயலை வன்மையாக கண்டிக்கி றது.  இவ்வாறு செய்வது சட்டப்பூர்வ மாக தண்டிக்கத்தக்க குற்றமாகும். ஆர்எஸ்எஸ் பாஜகவைச் சேர்ந்த  யாரும் இதைக் கண்டிக்க முன்வர வில்லை என்பது இத்தகைய கிரி மினல் நடவடிக்கைக்கு துணை போகும் செயலாகும். உத்தரப்பிர தேச மாநில அரசு, சாமியார் பரம கம்ச ஆச்சாரியா மீது கிரிமினல்  வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாற்றுக் கருத்து தெரிவிப்ப வர்களை கொலை செய்து விடுவ தாக மிரட்டும் அயோத்தி சாமியா ருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்  குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.