சென்னை, மே 9- இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டு 13,707 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1,648 சத வீதம் அதிகமாகியுள்ளது என்று காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன. இதற்கு இத்துறைகளின் அமைச்சரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். பேரவையில், காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் சைபர் (இணையதள) குற்ற காவல் நிலையங்கள் தொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்: nடிஜிட்டல் மயமாக்கல், இணைய வசதிகள் மற்றும் செல்போன் களின் பரவலான பயன்பாடு, இணையதள குற்றங்கள் வேக மாக அதிகரிக்கக் காரணமாக உள்ளது. n 2011-ஆம் ஆண்டு இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 748-ஆக இருந்த நிலையில் 2021-ஆம் ஆண்டு 13,707 ஆக அதி கரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 1,648 சதவீதம் அதிகமாகியுள்ளது. n பெரும்பாலான இணையதள குற்ற வழக்குகளில் வெளிநாட்டி னர் ஈடுபடுவதால், குற்றவாளி களை கைது செய்தல் மற்றும் களவு போன சொத்துக்களை மீட்டெடுத்தல் மிகப்பெரும் சவாலாக உள்ளது.
nவங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டாலும், சட்ட சிக்கல்கள் மற்றும் இதர நடைமுறைகள் கார ணமாக, புகார்தாரருக்கு பணத்தைத் திரும்ப வழங்குவது காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. n இப்பிரச்சனையை எதிர்கொள்ள சென்னை மாநகரில் கூடுதலாக அதாவது 4 மண்டலங்களுக்கு தலா ஒன்றும், மத்திய குற்றப்பிரி விற்கு ஒன்றும் என 5 இணையதள குற்ற காவல் நிலையங்கள் மறுபரவலாக்கும்முறை மூலம் ரூ.85.69 லட்சம் செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. தமிழக அரசு இதற்கான ஆணை வெளி யிட்டுள்ளது. n புலன் விசாரணையை அறிவியல் முறையில் மேம்படுத்த இணைய தள தடயவியல் ஆய்வகம் அமைத்து அதில் உயர் தொழில்நுட்ப தடயவியல் கருவி கள், மென்பொருட்கள், சமூக வலைதள ஊள்ளீட்டுக் கருவி கள் அமைக்க ரூ.6.9 கோடி செல வில் ‘‘பாதுகாப்பான நகர’’ திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. n கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே இணையதள குற்றத் தால் பாதிக்கப்பட்ட பொது மக்க ளுக்கு அவர்கள் இழந்த பணம் ரூ.6.75 கோடி காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் மீட்கப் பட்டுள்ளது.