states

தீக்கதிர் விரைவு செய்திகள்

  1. ஜம்மு-காஷ்மீரில் வகு ப்புவாத வன்முறையை தூண்டுவதாக, முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட தோடு, சில நகரங்களில்  இணையச் சேவையை யும் முடக்கப்பட்டுள்ளது.
  2. விசாரணைக் கைதிகளை இரக்கமில்லாமல் உயிரி ழக்கும் வரை தாக்குவது காவல்துறையின் பேத லித்த மனநிலையையே காட்டுகிறது என்று  சென்னை உயர்நீதி மன்றம் கண்டனம் தெரி வித்துள்ளது.
  3. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரி தாக்கல் செய்யப் பட்ட வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
  4. குஜராத் மாநிலம் அக மதாபாத்தில் உள்ள இந்திய தேசிய விண் வெளி ஊக்குவிப்பு மற் றும் அங்கீகார மையத் தின்(IN-SPACe) தலைமையகத்தை பிரத மர் மோடி வெள்ளியன்று திறந்து வைத்தார்.
  5. கொரோனா கட்டுப்பாடு களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக் காததும், கோடை விடு முறைக் கொண்டாட்டங் களுமே தலைநகர் தில்லி யில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கக் காரணங்கள் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
  6. இடம் இருப்பதாக கூறி முன் பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலி யானது என்றும் மாண வர் சேர்க்கை தொடர் பான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற இணைய தளத்தை மட்டுமே அணுக வேண்  டும் அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
  7. இலங்கை முழுவதும் மின்வெட்டு கடுமையாக ஏற்பட்டுள்ளது. அரசின் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் மின் விநியோகம் இல்லை. இலங்கையின் பிரதான  மின்துறை நிறுவனமான சிலோன் மின்சார வாரியத்தில் பணியாற்றும் 1,300 பொறியியல் வல்லுநர்களில் 900 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் மின்னுற்பத்தி யும் பாதிக்கப்பட்டுள்ளது.
  8. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக காங்கோ வுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பெல்ஜிய மன்னர் பிலிப், காலனியாதிக்கத் தின்போது நடந்த நிகழ்வுகளின் வலியை உணர்வதாகத் தெரிவித்தார். காங்கோ நாடாளு மன்றத்திற்கு வெளியே உரையாற்றிய அவர், ‘‘பெல்ஜியத்தின் காலனியாதிக்கம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. மக்கள் இழிவாக நடத்தப்பட்டனர். சமமற்ற உறவு இருந்தது’’ என்று குறிப்பிட்டார்.
  9. உக்ரைன் நெருக்கடியால் உலகம் முழு வதும் சமூக மற்றும் பொருளாதாரக் குழப்பங்கள் உருவாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் எச்சரித்திருக்கிறார். 100 நாட்களு க்கு மேலாக நடந்து வரும் ரஷ்ய-உக்ரைன் மோதல், பிற நெருக்கடிகளோடு இணைந்து கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பட்டினி மற்றும் வறுமை ஆகிய இரண்டும் அதிகரித்துள்ளன என்கிறார் குட்டெரஸ்.