தெலுங்கானா மாநிலத்தில் நவ.30 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்குள்ள எம்எல்ஏக்களின் குற்ற வியல், நிதி மற்றும் பின்னணி விவரங்கள் தொடர்பாக ஜனநாயக சீர்திருத்தங் களுக்கான சங்கம் (ஏடிஆர்) மற்றும் தெலுங்கானா தேர்தல் கண்காணிப்பு குழு சனியன்று அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையில், தெலுங்கானா வில் உள்ள 118 எம்எல்ஏக்களில் (மொத் தம் 119 - ஒரு தொகுதி காலி - செகந்திரா பாத் கான்ட்) 72 பேர் மீது கிரிமினல் வழக்கு கள் உள்ளதாகவும், 46 பேர் மீது கடுமை யான குற்ற வழக்குகள் இருப்பதாக வும், ஐபிசி பிரிவு 307-ன் கீழ் கொலை முயற்சி தொடர்பான வழக்குகள் 7 எம்எல்ஏக்கள் மீது இருப்பதாகவும், 4 எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் தொடர்பான வழக்கு கள் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த 101 எம்எல்ஏக்களில் 59 (58 சதவீதம்) பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஒவைசியின் ஏஐஎம்ஐஎம்மின் 7 எம்எல்ஏக் களில் 6 எம்எல்ஏக்கள் (68 சதவீதம்), காங்கிரசின் 6 எம்எல்ஏக்கள் (67 சத வீதம்), பாஜகவின் 2 எம்எல்ஏக்கள் மற்றும் 2 சுயேச்சை எம்எல்ஏக்களில் ஒருவர் மீது கடுமையான குற்ற வழக்குகள் இருப்ப தாக பிரமாணப் பத்திரங்களில் தெரிவித் துள்ளனர் என்று ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.