13-வது சீசன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5 அன்று இந்தியாவில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான உலகக்கோப்பை உலகின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சுற்றி வரும் நிலையில், வெள்ளியன்று தமிழ்நாடு தலைநகர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ ஹாலில் செப்., 16, 17 ஆகிய 2 நாட்கள் பொதுமக்களின் பார்வைக்கு உலகக்கோப்பை வைக்கப்பட்டுள்ள நிலையில், உலகக்கோப்பையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பார்வையிட்டார்.