states

உழைக்கும் வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர்

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலச் செயலா ளர் முகமது சலீம் வெளியிட் டுள்ள இரங்கல் செய்தியில்: “நமது நாட்டின் கம்யூ னிஸ்ட் இயக்க மூத்தத் தலை வர் தோழர் என். சங்கரய்யா மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலக்குழு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறது. விடு தலைப் போராட்ட வீரரும், உழைக்கும் வர்க்கத்தின் ஒப்பற்  றத் தலைவருமான தோழர் சங்கரய்யா 1964-ஆம் ஆண் டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை துவக்கிய தலை வர்களில் ஒருவராவார். தமிழ் நாட்டில் கட்சியை நீண்ட காலம் வழிநடத்தியவர். கட்சியின்  மத்தியக் குழு உறுப்பினராக வும் செயல்பட்டு, முக்கிய பங்காற்றியுள்ளார். கட்சியின் தமிழ்நாடு மாநி லக்குழுவுக்கும், தமிழ்நாட்டின் தோழர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கிறோம். அவ ருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எங்களது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்” .