states

என்எல்சியில் நிலம் தராதவர்களுக்கு வேலையா?

கடலூர், ஆக.6- என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் பட்டியலில் வட மாநிலத்தைச் சேர்ந்த 28 பேருக்கு நிரந்தர வேலை வழங்கியது தொடர் பாக மாநில அரசு விசாரணை நடத்த  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:- நெய்வேலி என்எல்சி நிறுவனத் திற்கு நிலம் கொடுத்த கடலூர் மாவட்டத் தைச் சேர்ந்த பல ஆயிரத்திற்கும் அதிக மான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படவில்லை. ஆனால், நிலம் வழங்காத வட இந்தியர்கள் 28 பேருக்கு நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலை வழங்கி உள்ள விபரம் தகவல் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. இது கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. என்எல்சி நிறுவனம் உருவாக காரணமாக இருந்த, நிலம் கொடுத்த விவசாயிகளின் கோரிக்கைகள் கடந்த 50 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட வில்லை. இன்று வரை நிலம் கொடுத்த  விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை, மாற்று இடம், மாற்று  இடத்திற்கான மனைப்பட்டா, வேலை  இழக்கும் விவசாய தொழிலாளர்க ளுக்கு நிவாரணம், புறம்போக்கில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம்  உள்ளிட்ட அடிப்படையான கோரிக் கைகள் நிறைவேற்றப்படவில்லை.  இந்நிலையில், வட மாநிலத்த வருக்கு என்எல்சியில் வேலை வழங்கப்பட்ட சம்பவம் குறித்து முறை யான விசாரணை நடத்த ஒன்றிய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி  விவசாயிகள், விவசாய தொழிலாளர் அமைப்பின் சார்பில் ஆக. 8 அன்று  கடலூர், சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு, விருத்தாசலம் ஆகிய இடங்க ளில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.