புதுதில்லி, மே 1 - ஐந்தாண்டு காலமாக ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் நடத்தாம லிருப்பது அடிப்படை அரசமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை கடுமையாகக் கண்டித்துள் ளது. அத்துடன் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழுக் கூட்டம் தலை நகர் புதுதில்லியில் ஏப்ரல் 27-29 தேதி களில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
அதானி விசாரணை
அதானி குழுமத்தில் மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்திட ஒன்றிய அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்திடும் சூழ்நிலையில், ‘செபி’ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக விசாரணை அறிக்கை யைத் தாக்கல் செய்திட மே 2இ லிருந்து மேலும் ஆறு மாத காலம் அவ காசம் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறது. இந்தப் புகார்கள் தொடர்பாக உண்மையை நிறுவிட, கூட்டு நாடாளு மன்றக் குழு அமைத்து புலன் விசார ணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
மல்யுத்த வீராங்கனைகள்-வீரர்கள் போராட்டம் குறித்து…
மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களுக்கு எதிராக நீதி கோரி, பதக்கங்கள் பெற்ற மல்யுத்த வீராங்கனைகளும் வீரர்களும் நடத்தி வரும் போராட்டத்திற்கு மத்தியக்குழு முழு ஆதரவினை அளிக்கிறது. ஆரம்பத்தில் முகம் சுழித்தபோதிலும், தில்லிக் காவல்துறை தற்போது இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பாஜக எம்.பி.-யான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டி வந்திருக்கிறது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பொறுப்பி லிருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் அகற்றப்பட வேண்டும் என்றும், முதல் தகவல் அறிக்கையின் அடிப்படை யில் காவல்துறையினர் அவர்மீது உடனடியாக நடவ டிக்கைகள் மேற்கொண்டு, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் மத்தியக்குழு கோருகிறது.
ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர் 2018இலிருந்து மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட சட்டமன்றம் இல்லாமல் இருந்து வரு கிறது. தேர்தல் நடைபெறுவதற்கு முன் ஒன்றிய அரசாங்கம் மூன்று நிபந்தனைகளை விதித்திருந்தது. அம்மாநிலத்தில் தொகுதிகள் மறுபங்கீடு செய்யப்பட வேண்டும், தேர்தல் வாக்காளர் பதிவேடுகள் மேம்படுத்தப்பட வேண்டும், தேர்தல் நடைபெறுவதற்கான அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும். அரசாங்கத்தின் சொந்த ஒப்புதலின் அடிப்படையிலேயே இவை அனைத்தும் அங்கே பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன. எனினும் தேர்தல் நடத்திட ஒன்றிய அரசாங்கம் முன்வர மறுப்பது, தாங்கள் விரும்பும் விதத்தில் அங்கே ஆட்சி அமைக்க முடியும் என்பதில் அது நிச்சயமற்ற நிலையில் இருப்பதையே தெளிவாகக் காட்டுகிறது. இது மக்களின் அடிப்படை அரசமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயல்களாகும். ஜம்மு-காஷ்மீரில் உடனடியாகத் தேர்தல்கள் நடத்தப் பட வேண்டும் என்று மத்தியக் குழு கோருகிறது.
வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் சம்பந்தமாக
வீணடிக்கப்பட்ட சென்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது வனப் பாதுகாப்புச் சட்டத்தில், கொண்டுவரப்பட்ட திருத்தங்கள், மிகவும் அழிவைத் தரக்கூடியவைகளாகும், பருவநிலை மாற்றங்களை மிகவும் மோசமாகப் பாதித்திடும், இதன் பாதிப்புகளை நாட்டின் பல பகுதிகளில் பல வடிவங்களில் ஏற்கனவே உணர்ந்திருக்கிறோம். இந்தத் திருத்தங்கள் அரசமைப்புச் சட்டமும், மற்றும் பல சட்ட உரிமைகளும் கிராம சபைக ளுக்கு அளித்திருந்த அதிகாரங்களைப் பறிக்க வகை செய்கிறது. வன நிலங்களை மடை மாற்றம் செய்திட வகை செய்கிறது. மாநில அரசாங்கங்களின் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்து, வனங்களைத் தனியாரிடம் தாரை வார்த்திட ஒன்றிய அரசாங்கத்திற்கு ஏராளமான அதிகா ரங்களை வழங்குகிறது. இது, பழங்குடியினர் மற்றும் காலங்காலமாக வனங்களில் வாழ்ந்துவருபவர்களின் உரிமைகள் மீது மேலும் தாக்குதல் தொடுத்திடும். இப்போதிருக்கும் வன உரிமைகள் சட்டத்தினை நேரடியாக மீறுவதாகும். இந்தச் சட்டத்திருத்தம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்.
திரிபுரா
திரிபுராவில் தேர்தலுக்குப்பின்னர் ஆளும் பாஜக கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறை வெறியாட்டங்களை மத்தியக்குழு கடுமையாகக் கண்டிக்கிறது. நேரடித் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதுடன், பல இடங்களில் மக்களை மிரட்டிப் பணம் பறிப்பது, அவர்களின் சொத்துக்கள், கடைகள், ஆட்டோ ரிக்சா போன்ற வாழ்வா தாரங்களைப் பறித்துச் செல்வது போன்ற இழிசெயல்க ளிலும் ஈடுபடுகிறார்கள். இது, பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அங்கே நடைபெற்றுவரும் வன்முறை வெறியாட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அங்கே கறாராக ஆட்சி நடத்தப்பட வேண்டும், இத்தகு இழிசெயல்களில் ஈடுபடும் கயவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்க ளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் மத்தியக்குழு கோருகிறது.
மத்தியக் குழு அறைகூவல்கள்
நாட்டிற்கும் நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களுக்கும் தேவையான உடனடியான பிரச்சனைகள் மீது நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்ட நடவடிக்கைகள் மேற் கொள்வதற்காக, இடதுசாரிக் கட்சிகளுடன் கலந்து பேசு வதற்கு, மத்தியக் குழு தீர்மானித்திருக்கிறது. இதர மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் கலந்துபேசி, பொது நடவடிக்கைகள் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் எழுப்பப்படும்.
ஸ்தாபனம்
விவசாயத் தொழிலாளர் இயக்கத்தின் தலைவர் விக்ரம் சிங்கை, மத்தியக்குழுவில் காலியாகவுள்ள இடத்தில் நிரப்பிட, மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது.
தமிழில்:ச.வீரமணி