சென்னை, ஆக.31- அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை கொச் சைப்படுத்திய தினமலர் நாளிதழுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தினமலர் நாளேட்டின் ஈரோடு, சேலம் பதிப்புகளில் தமிழ்நாடு அரசு துவக்கியுள்ள காலை சிற்றுண்டித் திட்டத்தை இழிவுபடுத்தும் வகையி லும், அரசுப்பள்ளிகளில் காலை மற்றும் மதிய உணவு சாப்பிடும் ஏழை, எளிய மாணவர்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் தலைப்புச் செய்தி வெளி யிட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலை யில், நாட்டிலேயே முதன் முறையாக காலை சிற்றுண்டித் திட்டத்தை தமிழ் நாடு அரசு துவக்கியுள்ளது.
முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் மாணவர்களிடமும், பெற்றோர்களிட மும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மனித வளர்ச்சி குறியீடுகளில் தமிழ கம் சிறந்தோங்கி இருப்பதற்கு இத்த கைய திட்டங்களும் முக்கிய காரணி யாக அமைந்துள்ளன. காலையில் ஏழை, எளிய குடும்பங்க ளைச் சேர்ந்த பிள்ளைகள் பெரும் பாலும் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவ தாகவும், இதனால் அவர்களது கற்றல் திறன் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலை யில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப் பட வேண்டிய ஒரு திட்டத்தை தினமலர் ஏடு ஊடக நெறிகளுக்கு மாறாக அரு வருக்கத்தக்க வகையில் திரித்து வெளி யிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். பகிரங்க மன்னிப்புக் கோருக! வக்கிரமும், வன்மமும் நிரம்பி வழி யும் இத்தகைய செய்தியை வெளியிட்ட தற்காக தினமலர் ஏடு தமிழ்நாட்டு மக்க ளிடமும், மாணவர்களிடமும், பெற் றோர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த ஏடு தொடர்ச்சியாக உழைக் கும் மக்களுக்கு எதிராகவும், சிறு பான்மை, பட்டியலின மக்களுக்கு எதி ராகவும், சனாதன அநீதிகளுக்கு ஆதர வாகவும் தொடர்ந்து எழுதி வருகிறது. இந்த ஏடு இத்தகைய விஷமப்போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.