அமலாக்கத்துறை செயல்படுவது எதிர்க்கட்சியாக உள்ள திமுக வை பழிவாங்குவதாக உள்ளது டன், மிரட்டி பணிய வைக்கும் நோக்கத்திலும் மேற்கொள்ளப் பட்டதாக உள்ளது. இத்தகைய அச்சுறுத்தும் அணுகுமுறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மிரட்டல்கள் மூலம் பாஜகவுக்கு எதிரான குரல்களை முடக்க நினைப்பது ஒருபோதும் ஏற்கத் தக்கதல்ல. மேலும், தமிழ்நாடு மக்களும் இதற்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என்பது தெளிவு. ஒருவர் மீது புகார், குற்றச்சாட்டுக் கள் எழுமானால் அவரை விசாரணைக்கு உட்படுத்து வதற்கு சட்ட ரீதியான விதிமுறை கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள் ளன. அதன்படி விசாரணை மேற்கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடி யாது. ஆனால், மோடி அரசு மேற் கொண்ட மூர்க்கத்தனமான சட்டத் திருத்தத்தை பயன்படுத்தி முறையான குற்றச்சாட்டுக்களை யோ, செந்தில்பாலாஜி மீதான வழக்கு விபரங்களையோ, விசார ணைக்கு ஆஜராக வேண்டுமென நோட்டீசோ வழங்காமல் அதிரடி யாக கைது செய்திருப்பது ஜன நாயக கோட்பாடுகளுக்கு விரோத மானதாகும். இந்த கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன் ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையினை கண்டித்து வலுவான எதிர்ப்புக் குரல் எழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு அனை த்து ஜனநாயக சக்திகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறது.
கே.பாலகிருஷ்ணன்
சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர்