states

பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக அனைத்து அமைப்புகளையும் இணைத்து போராட்டம்

சென்னை, ஏப். 15 - பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக அனைத்து அமைப்புகளையும் ஒருங்கி ணைத்து போராட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள் ளார். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளான வியாழனன்று (ஏப்.14) சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கே.பால கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார். இந்நிகழ்வில் கே.பால கிருஷ்ணன் பேசியதாவது: சாதிய ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்தியா வில், உழைக்கும் வர்க்கம் ஒன்றிணைந்து போராடினால்தான் பட்டியலின மக்கள் உரிமைகளை பெற முடியும். எனவே மார்க்சிஸ்ட் கட்சி அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடுகிறது.

நாடு விடுதலை பெற்று பல பத்தாண்டு கள் கடந்த பிறகும், பட்டியலின மக்களின் அடிப்படை வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வில்லை. ஆட்சி மாற்றங்கள்,  சட்டங்கள் பல வந்தபோதும் பட்டியலின மக்களுக்கு உரிமைகள் கிடைக்கவில்லை. அனைத்து உரிமைகளையும் இழந்தவர்களாக உள்ளனர்.     உலகின் வளர்ந்த நகரங்களின் பட்டிய லில் முதல் 10 இடத்தில் சென்னை உள்ளது. ஆனால், அடித்தட்டு மக்கள் குப்பங்களிலும், கழிவுநீர் கால்வாய் பகுதிகளிலும் வாழ்கின்றனர். நகரத்தின் சுகாதாரமான மையப் பகுதியில் வாழ முடியவில்லை. சமத்துவபுரங்கள் கட்டப்பட்டாலும் கூட,  ஓரங்கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட, புறக் கணிக்கப்பட்ட இடங்களில்தான் வாழ்கிறார்கள். சுகாதார வசதி கொண்ட மையப்பகுதியில் குடியமர்த்தும் நிலை கூட இல்லை. வாழ்க்கையின் அத்தனை கொடுமைகளையும் அனுபவிப்பவர்களாக உள்ளனர். சாதி ரீதியாக ஒடுக்கப்படுவது மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் சுரண்டப்படுகிறவர்களாகவும் உள்ளனர். சாதியத்தை ஒழிக்க வேண்டும். அதற்கு முன்பாக, சாதியத்தின் விளை வால் உருவான தீண்டாமை, ஒடுக்குமுறை யை ஒழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்,  இடதுசாரி    இயக்கங்களும், ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு குரல் கொடுக்கும் இயக்கங்களாக செயல்பட்டு வந்துள்ளன. கடைகோடி கிராமத்தில் பட்டியலின மக்களின் உரிமை கள் பறிக்கப்பட்டாலும், உடனடியாக களத்தில் நிற்கும் அமைப்பாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது.

அம்பேத்கர் பிறந்த நாளை ‘சமத்துவ நாளாக’ தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பாராட்டு. அதேநேரத்தில், சமத்துவத்தை உருவாக்க அனைத்துவித நடவடிக்கை களையும் எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் புகார் கொடுத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க  வேண்டும். பட்டியலின ஐஐடி மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக புகார் கொடுத்து ஓராண்டாகியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. மாண வியை ஐஐடி-யை விட்டு வெளியேற்றும் முயற்சி கள் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஐஐடியில் படிக்கும் மாணவிக்கே இந்த நிலைதான் என்றால், கிராமப்புறங்களின் நிலையை சொல்லத் தேவையில்லை. சமூகக் கொடுமை, சாதிய ஏற்றத்தாழ்வு தொடரும் வரை, பட்டியலின மக்கள் முழு விடு தலை பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் போராட்டம் ஓயாமல் தொடரும். பட்டி யலின மக்களின் முழு விடுதலைக்கு போராடும் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கி ணைத்து சாதி ஒழிப்பு போராட்டத்தை முன் னெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒதுக்கீட்டு இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேந்திரிய பள்ளிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பு தற்போது மறுக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதன் ஒருபகுதியாக எம்.பி.க்களின் ஒதுக்கீட்டு இடங்கள் பறிக்கப்பட்டுள்ளது என்றார்.