மதுரை, நவ. 2 - மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு வியாழனன்று வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கருப்புக்கொடி காட்டியும், கருப்புப் பலூன்களைப் பறக்கவிட்டும், கருப்புக் குடைகளை உயர்த்திப் பிடித்தும், கண்டன முழக்கங்களை எழுப்பியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் விலக்கு மசோதா உட்பட மக்களின் நலனுக்காக, தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறை வேற்றிய பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும், நாட்டு விடுதலைக்காக தனது பட்டப் படிப்பை துறந்து 8 ஆண்டுகள் சிறை சென்ற விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யாவிற்கு, கவு ரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திடாமலும், ஆளுநர் மாளிகையை பாஜக கட்சி அலுவலகமாக மாற்றி ஆர்எ ஸ்எஸ் - பாஜக ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும் என வலி யுறுத்தி இந்தப் போராட்டம் அறி விக்கப்பட்டு இருந்தது. அதன்படி, பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் நாகமலைப் புதுக்கோட்டை நான்குவழிச்சாலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டு ஆளுந ருக்கு எதிராக கண்டன முழக்கங் களை எழுப்பினர்.
“தமிழகத்தில் மதவெறிக் கரு த்தை விதைக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியே திரும்பிச் செல்.. பாஜக - ஆர்எஸ்எஸ் கைப்பாவை ஆளு நரே திரும்பிச் செல்.., சுதந்திரப் போராட்டத்தையும் - சுதந்திரப் போராட்ட வீரர்களையும் மதிக்கத் தெரியாத ஆளுநரே திரும்பிச் செல்.. சுதந்திரப் போராட்டத்தை காட்டிக்கொடுத்த சாவர்க்கரின் வாரிசே திரும்பிச் செல்...” என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர்கள் கருப்புப் பலூன்களை வானில் பறக்கவிட்டு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தங்களது எதிர்ப்பைத் தெரி வித்தனர். உயரே எழும்பிய பலூன் களை காவல்துறையினர் உடைத்த னர். அதையும் தாண்டி பல பலூன் கள் வானில் பறந்து சென்றன. பெண்கள், இளைஞர்கள் பலர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்ட த்தில் பங்கேற்றனர். கருப்புப் பலூன்களை பறக்க விட்ட வாலிபர்கள், மாணவர்களை காவல்துறையினர் தடுக்க முற்பட்ட னர். போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் இருந்து பலூன்களை பறித்து உடைக்க முயற்சி செய்த னர். அப்போது காவல்துறைக் கும் போராட்டத்தில் ஈடுபட்டவர் களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையின் நட வடிக்கையைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து, போராட்ட த்தில் ஈடுபட்டவர்களை காவல்து றையினர் கைது செய்தனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை புற நகர் - மாநகர் பகுதியிலிருந்து மார்க் ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், செங்கொடிகளுடனும், கருப்புக் கொடிகளுடனும் காலை 7.30 மணி க்கே திரளத் தொடங்கினர். 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் துவங்கிய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செய லாளர் கே. ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணே சன் ஆகியோர் தலைமை வகித்த னர். மூத்தத் தலைவர் சி. ராம கிருஷ்ணன், மாநிலக்குழு உறுப் பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா உட் பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
2 பேராசிரியர்கள் டாக்டர் பட்டங்களை பெற மறுப்பு
பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த 15 செனட், சிண்டிகேட் உறுப்பினர்கள்
கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை, போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றபின், ஆளுநர் ஆர்.என். ரவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். முனைவர் பட்டம் பெற்ற 602 பேர், பதக்கம் பெற்ற 143 பேர் உட்பட மொத்தம் 788 பேருக்கு பட்டங்களை வழங்கினார். எனினும், பட்டங்களை வழங்கிய பின் உரை நிகழ்த்தாமல் கிளம்பிச் சென்ற ஆளுநர், பட்டம் பெற்ற மாணவர்களுடன் கலந்துரையாடலை மட்டும் நடத்தினார். விடுதலைப் போராட்ட வீரர் என். சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் பரிந்து ரைத்த நிலையில், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கா ததைக் கண்டித்து, தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, ஏற்கெனவே அறிவித்தபடி இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை. அவர் ஆளுநரின் நிகழ்ச்சி யை புறக்கணித்த நிலையில், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் செனட், சிண்டிகேட் தீர்மானத்தை மதிக்காத ஆளுநரைக் கண்டித்து, செனட், சிண்டிகேட் உறுப்பினர்கள் 15 பேரும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தனர். இதேபோல சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்காத ஆளுநரின் கையால் டாக்டர் பட்டத்தை பெறப்போவதில்லை என்று தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளரும், கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளருமான சோ. சுரேஷ், ஏற்கெனவே பட்டமளிப்பை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி பேராசிரியர் சோ. சுரேஷ், மற்றொரு பேராசிரியரான சி. ரமேஷ்ராஜ் ஆகியோரும் ஆளுநர் ஆர்.என். ரவியின் கையால் டாக்டர் பட்டத்தை வாங்க மறுத்து பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தனர்.