புதுதில்லி, மே 11- பாய்ச்சல் வேகத்தில் பயணிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழுக் கூட் டம் புதுதில்லியில் மே 9-10 தேதி களில் நடைபெற்றது. அதன்பின் கூட்ட முடிவுகளை விளக்கி பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி, மத்தி யக்குழு அலுவலகமான ஏ.கே. கோபாலன் பவனில், செய்தியாளர் களிடையே கூறியதாவது: எவ்விதமாக கட்டுப்பாடுமின்றி அதிகரித்துக்கொண்டிருக்கும் விலை வாசி மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறது. கோடானுகோடி மக்கள் அவதிப்பட்டுக்கொண்டு, பசி- பட்டினிக் கொடுமையுடன் வறுமைக் குழிக்குள் தள்ளப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். இத்துடன் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள வேலையின்மையும் சேர்ந்துகொண்டு, மக்களின் துன்ப துயரங்களைப் பன்மடங்கு பெருக்கி இருக்கிறது.
கடந்த ஓராண்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் 70 சத வீதமும், காய்கறிகளின் விலைகள் 20 சதவீதமும், சமையல் எண்ணெய் விலைகள் 23 சதவீதமும், தானி யங்களின் விலைகள் 8 சதவீத மும் உயர்ந்திருக்கின்றன. கோடிக் கணக்கான மக்களின் அடிப்படை உண வாக விளங்கும் கோதுமை கிலோ விற்கு சுமார் 35 ரூபாய் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலையும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் தொடர்ந்து உயர்த்தப்பட்டுக் கொண்டே இருப்பது ஒட்டுமொத்த பணவீக்கத்தையும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அனைத்துப் பெட்ரோலியப் பொருட்களின் மீதான செஸ்/சர்சார்ஜ் வரிகளை ஒன்றிய அரசு உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும். பொது விநியோக முறையின் மூலமாக கோது மை விநியோகத்தை மீளவும் கொண்டு வந்திட வேண்டும். இவ்வாறான விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்திட வகை செய்யும் விதத்தில் பொது விநியோக முறை வலுப் படுத்தப்பட வேண்டும். இத்தகைய விலைவாசி உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஓர் ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த போராட்டத்தை இடதுசாரிக் கட்சிகள் மேற்கொள் ளும். இவ்வாறு அவர் கூறினார்.