states

தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு சிபிஎம் அஞ்சலி

சென்னை, நவ.22- தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு இரங்கல்  தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  தமிழ்த் தொண்டையே வாழ்வின் நெறியாகக் கொண்டவர் என்று   புகழஞ்சலி செலுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறோம். அவரது மறைவு தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்கு பேரிழப்பாகும். தமிழ்த் தொண்டையே தன் பெரு வாழ்வின் பெரு  நெறியாகக் கொண்ட அறிஞர் அவர். கல்லூரி விரிவுரை யாளர் பணி தொடங்கி, பல்கலைக்கழக துணைவேந்தர் வரை, அகில இந்திய வானொலியின் செய்தி வாசிப்பாளர்  பணி தொடங்கி தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறைச் செய லாளர் பதவி வரை பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்பட்டவர். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். தமிழறிஞர் அவ்வை நடராசன் தொல்காப்பியம், சங்க  இலக்கியம், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் என தமிழ்  இலக்கியங்களை வெகு மக்களிடம் கொண்டு சேர்த்த வர். தமிழ் இலக்கணத்தைக் கூட எளிய மக்களுக்கும் புரியும்படி விளக்கியவர். இலக்கியப் புலமைமிக்க தலை  சிறந்த பேச்சாளர். பல்வேறு ஆய்வு நூல்களுக்கு சொந்தக்  காரர். எல்லோரிடமும் இனிமையாக பழகக் கூடிய பண்பா ளர். தமிழ் மொழியை உலக அரங்கில் நிலை நிறுத்த அவர் ஆற்றிய பணி என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கு கட்சி யின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.