புதுக்கோட்டை, ஜன.1- இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை நான் குறைத்து மதிப்பிட வில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட் பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீருக்கான மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலத்தை கலந்த வன்செயலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சனிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்ட உரையாற்றிய விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவள வன் எம்.பி., பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பட்டியலின மக்களுக்கு நேரிடும் வன் கொடுமைச் சம்பவங்களில் அதிகாரிகள் சட்டத்தை முறையாக அமலாக்குவதில்லை. பாதிக்கப்பட்டோர் தரப்பில் புகார் அளிக் கப்பட்டாலும் மாவட்ட அளவிலான விழிக் கண் கூட்டத்தில், ‘தவறான தகவல்’ என்ற பெயரில் பல வழக்குகள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை யைக் கடைபிடிக்கும் வகையில் செயல்பட்ட வர்களை கைது செய்ததை வரவேற்கிறேன். அதேநேரத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்தவர்களைக் கண்டுபிடித்து கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது. துணிச் சலுடன் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சி யரையும், காவல் கண்காணிப்பாளரையும் பாராட்டுகிறேன். அதேநேரத்தில், புதுக்கோட்டை மாவட் டத்தில் பல கிராமங்களில் தீண்டாமைப் பிரச்ச னைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின் றன. எனவே, புதுக்கோட்டையை வக் கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண் டும். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். இந்தப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அந்தக் கட்சி யின் சட்டமன்ற உறுப்பினரின் தலையீடு வர வேற்கத்தக்கது. இப்பிரச்சனையில் ஒரு சில கட்சிகள்தான் குரல் கொடுத்துள்ளனர். பலர் மெளனமாகவே இருக்கிறார்கள். எல்லோ ருமே பேச வேண்டும். அதுதான் தீண்டாமைக் கொடுமைகள் தீர வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.