சென்னை, மே 12- கோயில் நிலங்களில் பல்லாண்டு காலம் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் , அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக் கப்பட்டுள்ள கோயில் நிலங்களில் குடியிருப் போருக்கான நியாய வாடகை நிர்ணயம் செய் யும் குழு தலைவருக்கும் அதன் உறுப்பினர் களுக்கும் மே 11 அன்று கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
தமிழ்நாடு முழுவதும் கோவில் இடங்களில் அடிமனைகளில் வீடு கட்டி குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு அவர்கள் ஏற்கனவே கோவில் நிர்வாகங்களுக்கு செலுத்தி வந்த பகுதி பணம் 1998 இல் இருந்து மாத வாடகையாக தீர்மானிக் கப்பட்டு அரசாணைகள் 56, 353, 456, 298 இன் படி வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2010 இல் வெளியிடப்பட்ட அரசாணை 298-இன்படி உள்ள வாடகை நிர்ணயமே பயனாளிகள் கட்ட முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதம் உயர்த்திட வேண்டுமென்ற உத்தரவால், பயனாளிகளுக்கு பல மடங்கு வாடகை உயர்வு ஏற்பட்டு அவை அனைத்தும் தற்போது நிலுவை வாடகையாக ஒவ்வொருவருக்கும் பல லட்சங்கள் உள்ளது.
புதிதாக வாடகை உயர்வு கூடாது
எனவே, இவர்களுடைய வாடகை சுமையை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட கோரிக்கை களை கனிவோடு பரிசீலனை செய்து உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோவில் இடங்களில் வீடு கட்டி குடியிருப்போர்கள், கடை கட்டி வியாபாரம் செய்வோர் சாதாரண ஏழை, எளிய மக்களாகவே உள்ளார்கள். இந்த இடத் துக்கு ஏற்கனவே அந்தந்த கோவில் அறங்காவ லர்களே வாடகை தீர்மானித்து வந்தார்கள். 1998 முதல் அறநிலையத்துறை வாடகை தீர்மானித்து பலமுறை தொடர்ந்து உயர்த்தியும் வந்துள்ளது. 1990 ஆம் ஆண்டில் மொத்த வாடகை வரு மானம் ரூ.1 கோடிக்கும் குறைவாகவே இருந் துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு இது சுமார் ரூ.110 கோடியாக உயர்ந்து, தற்போது ரூ.200 கோடிக்கும் அதிகமாக உயர்வு ஏற்பட் டுள்ளது. அறநிலையத்துறை வாடகை உயர்வை கணக்கிட்டால் சுமார் 150 மடங்கு உயர்ந்துள் ளது. கடுமையான விலைவாசி உயர்வு, கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், வேலை மற்றும் வருமான இழப்புகள் அதிக ரித்துள்ள சூழ்நிலையில் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு புதிதாக வாடகை உயர்வு மேற்கொள்ளக் கூடாது.
1. 2003 ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத் திருத்தம் 34ஏ-இல் “சந்தையில் நிலவும் வாடகை மதிப்பு” -இன்படி வாடகை நிர்ண யித்து அதை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்த வேண்டும் என்ற உத்தரவால் பல குழப்பங்கள் நிலவுகின்றன. சந்தை அடிப்ப டையில் நிலம், வாடகை மதிப்பினை தீர்மா னிப்பது மிகவும் கடினமாகும். மேலும் தனி யார் கட்டிடங்கள் உரிய பராமரிப்பு, அதிக வசதிகள் செய்து கொடுத்து, அதிக வாடகை தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அறநிலை யங்களுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு அறநிலையத்துறை எந்த பராமரிப்பு பணி யையும் செய்வதில்லை. பராமரிப்பு பணி களை சம்பந்தப்பட்ட வாடகைதாரரே மேற் கொள்வதால் அவருக்கு கூடுதல் செல வினம் ஏற்படுகிறது. மேலும் கோயில் இடத்தில் குடியிருப்பவர்கள் தங்கள் சொந்த உழைப்பின் மூலமே வீடுகள் கட்டியுள்ள னர். அடிமனை மட்டுமே கோவிலுக்குச் சொந்தமானது. சந்தை வாடகை மதிப்பு என்பதை பல அதிகாரிகள் தவறாக புரிந்து கொண்டு சொத்தின் சந்தை மதிப்பு அடிப்ப டையில் வாடகை தீர்மானிக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 2019 ஆம் ஆண்டு மேற்கண்டவாறு வாடகை தீர்மா னிக்க உத்தரவிட்டதுடன் இந்த வாடகை களும் 2016 ஆம் ஆண்டு முதல் கட்ட வேண்டு மென உத்தரவிடப்பட்டது மிகப்பெரிய அநீதி யாகும். பல மடங்கு வாடகையை உயர்த்தி விட்டு, அந்த வாடகைத் தொகையினை சில ஆண்டுகளுக்கு முன்தேதியிட்டு கட்ட வேண்டுமென்பதால் பயனாளிகளுக்கு பெரும் சுமை ஏற்பட்டுள்ளது. உதாரண மாக ரூ.4 ஆயிரம் வாடகை உள்ள கட்டி டத்திற்கு ரூ.22 ஆயிரம் என மாத வாடகை யை உயர்த்திவிட்டு இந்த தொகையினை மூன்றாண்டுகள் (36 மாதத்திற்கு) முன்தேதி யிட்டு கட்ட வேண்டுமென்றால் பல லட்சம் ரூபாயினை பயனாளிகள் கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த தொகையினை கட்ட முடியாதவர்களை ஆக்கிரமிப்பாளர் என அறிவித்து இடத்தை காலி செய்ய கட்டா யப்படுத்தும் நிலைமையே உருவாகியுள் ளது. தற்போது ஒவ்வொரு வாடகைதாரர் களுக்கும் பல லட்சம் நிலுவையில் உள்ளது. எனவே, தற்போதுள்ள சட்டப்பிரிவு 34ஏ-ஐ நீக்கிட சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டு மென கேட்டுக் கொள்கிறோம்.
குறைந்தபட்ச வாடகை நிர்ணயித்திடுக!
2. குடியிருப்பு பகுதிகளுக்கு தற்போதுள்ள வாடகை 0.10 என்று இருப்பதை 0.05 என்று மாற்றி அமைத்திடவும், ஏழை மக்களுக்கு தற்போதைய வாடகையில் 50 சதம் குறைந்த பட்ச வாடகையை நிர்ணயிக்க வேண்டும்.
3. பட்டியலினம், பழங்குடியினர், அருந்ததி யினர், பெண்கள் தலைமை தாங்கும் குடும் பங்களுக்கு தற்போதைய வாடகையில் 50 சதம் குறைத்து வாடகை நிர்ணயிக்க வேண்டும்.
4. வாடகை நிர்ணயம் செய்யும்போது வாடகை தாரர்களின் கருத்தறியும் கூட்டங்களை நடத்தி, அவர்களுடைய கருத்துக்களையும் பரிசீலனை செய்து வாடகை நிர்ணயம் செய் திட வேண்டும்.
5. அரசே கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வ தைக் கணக்கில் கொண்டு இதுவரையுள்ள வாடகை நிலுவைத் தொகையினை கருணை அடிப்படையில் குடியிருப்பாளர்களுக்கு தள்ளுபடி செய்திட வேண்டும்.
6. புதிய வாடகைதாரர்களாக வரன்முறைப் படுத்துபவர்களுக்கு வாடகை நிர்ணயிக்கும் போது வாடகைதாரர்களும், அதிகாரிகளும் பேசி உடன்பாடு செய்து கொண்டு அதன டிப்படையில் வாடகை நிர்ணயம் செய்திட வேண்டும்.
7. புதிதாக வரன்முறைப்படுத்தி வாடகைதாரர் களாக வருபவர்களுக்கு வாடகை செலுத்த முன்வரும் தேதியிலிருந்து மட்டுமே வாடகை வசூலிக்க வேண்டும்.
நிபந்தனையின்றி பெயர் மாற்றம் செய்து தருக!
8. வாரிசு அடிப்படையில் பெயர் மாற்றம் செய்ய விரும்பும் பயனாளிகளுக்கு இறந்த வர்களின் இறப்புச் சான்று, வாரிசு சான்றிதழ் மட்டும் பெற்றுக் கொண்டு எந்த நிபந்தனை யுமின்றி பெயர் மாற்றம் செய்து தர வேண்டும்.
9. குடியிருப்பு பகுதிகளுக்கு வாடகை உயர்த் தாமல் வணிகத்திற்கு மட்டும் தற்போதுள்ள பொதுவான வாடகை நிர்ணயம் செய்யா மல் குடியிருப்புகளோடு சேர்ந்த கடை களுக்கு வாடகை குறைவாகவும், சிறு-குறு, நடுத்தர கடைகளுக்கு ஏற்றாற்போலும், பெரும் வணிக நிறுவனங்களுக்கு தனியாக வும் வாடகை நிர்ணயம் செய்திட வேண்டு மென கேட்டுக் கொள்கிறோம். இந்த வாடகை உயர்வை ஐந்தாண்டிற்கு ஒரு முறை உயர்த்திட வேண்டும்.
10. நீண்ட காலமாக குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு “குத்தகை உரிமை பதிவு 1.10.1969” (Record of denace right) செய்து தர கோருகிறோம்.
11. விளைச்சலில் குத்தகை விவசாயிகளிட மிருந்து 75:25 என்ற முறையில் குத்தகை வசூ லிக்கப்பட வேண்டும். நிலுவையில் உள்ள குத்தகை பாக்கிகளை ரத்து செய்திட வேண் டும்.
12. குத்தகை செலுத்தும் விவசாயிகளிடம் அந் தந்த பசலி ஆண்டுகளில் அவரவர் செலுத் திட வேண்டிய தானியங்களுக்கான தொகை யை அந்தந்த ஆண்டுகளில் உள்ள அரசின் விலையை கணக்கிட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
13. அறநிலைய சட்டம் 34 இன் படி பல தலை முறைகளாக கோயில் இடங்களில் குடியி ருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயி கள், சிறுகடை வைத்து வியாபாரம் செய்ப வர்களுக்கு அந்தந்த இடங்களுக்கான நியா யமான விலையை தீர்மானித்து கிரயத் தொகையை தவணை முறையில் பெற்றுக் கொண்டு இடங்களை பயனாளிகளுக்கு சொந்தமாக்கிட வேண்டும். வறுமைக்கோட் டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக அரசே பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளர், சுற்றுலா - பண்பாடு (ம) அறநிலையங்கள் துறை முதன்மை செயலா ளர், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர், வணிகவரி (ம) பதி வுத்துறை செயலாளர், சட்டத்துறை (சட்ட விவ காரங்கள்) செயலாளர், இந்து சமய அறநிலை யத்துறை ஆணையர், நில நிர்வாகத்துறை கூடு தல் இயக்குநர், கூடுதல் பதிவுத்துறை தலைவர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணை யர் (விசாரணை), தனி அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் (ஆலய நிலங்கள்) இந்து சமய அறநிலையத்துறை, இந்து சமய அற நிலையத்துறை தலைமைப் பொறியாளர் ஆகி யோருக்கு இந்த மனு அனுப்பப்பட்டுள்ளது.