திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையிலான இடது முன்ன ணியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கும் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி தொகுதி உடன்பாட்டில் 17 தொகுதி ஒதுக்கப்பட் டுள்ள நிலையில், 17 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை சனியன்று காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.
கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பெங்களூரு - தில்லி சென்ற பொழுது 55 பயணிகளை ஏற்றா மல் சென்ற விவகாரத் தில், கோ பர்ஸ்ட் (GO FIRST) விமான நிறுவ னத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது விமானத்துறை இயக்கு நரகம்.
இந்திய ஜனாதிபதி மாளி கையின் கட்டட வெளிப் பகுதியில் மரங்கள், பூச் செடிகள், அழகு தாவ ரங்கள் இருக்கும் பகுதி “முகலாய தோட் டம்” என அழைக்கப் பட்டு வந்தது. அதை, “அம்ரித் உதயன்” என பெயர் மாற்றம் செய்துள் ளது ஒன்றிய பாஜக அரசு.
பொருளாதார நெருக்கடி யை சந்தித்து வரும் இங்கிலாந்து நாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலை யில், தலைநகர் லண்ட னில் வீட்டு வாடகை மாதக்கட்டணமாக ரூ.3 லட்சம் வரை வசூலிக் கப்படுகிறது.
உக்ரைனுக்கு 31 அதி நவீன பீரங்கிகளை வழங் குவதாக உறுதி அளித்த தன் மூலம், போரின் தீவி ரத்தை அமெரிக்கா அதி கரித்துள்ளதாக வட கொரியா குற்றம்சாட்டி யுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பல்லவாடா கிரா மத்தில் கடந்த 24-ஆம் தேதி அதிமுக பெண் கவுன்சிலரை கத்தி முனையில் கடத்திய விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்
இந்துத்துவா அமைப்பி னரின் கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியாகிய ஷாருக்கானின் “பதான்” திரைப்படம் 3 நாட்களில் 160 கோடி ரூபாய் வசூ லித்து பாக்ஸ் ஆபிஸ் வசூ லில் “பாகுபலி 2” மற்றும் “கேஜிஎப் 2” திரைப்படங் களை பின்னுக்கு தள்ளி யுள்ளது.
திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 48 பேர் கொண்ட வேட் பாளர் பட்டியலை பாஜக சனியன்று வெளியிட் டது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடை பெற்று வரும் நுமைஷ் கண்காட்சியில் பெண் களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 41 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். உளவு கேம ராக்களின் அடிப்படை யில் போலீசார் ஆய்வு செய்து 41 பேருக்கும் மூன்று முதல் 10 நாட்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்காக 286 மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைப்பு.
உலகச் செய்திகள்
வியட்நாமின் நகர்மயமாதல் 2023-ஆம் ஆண்டில் 53.9 விழுக்காட்டைத் தொட வேண்டும் என்று இலக்கு நிர்ண யித்திருக்கிறார்கள். 2022-ஆம் ஆண்டில் 41.7 விழுக்காடாக அது உள்ளது. நகர்மயமாதலை ஊக்குவிக்கும் வியட்நாம் அரசு, வளரும் நகரங்களுக்குத் தேவையான அடிப்படையான வசதி களை செய்ய வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறது. நகரங்க ளின் ஒவ்வொரு அம்சங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் கொண்ட மின்னணு பெட்டகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
வங்கதேசத்தின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி அப்துல் ஹமீது இரண்டு முறை ஜனாதிபதியாகப் பதவி வகித்து விட்டதால், இந்த முறை அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவருடைய பதவிக்காலம் ஏப்ரல் 23 ஆம் தேதியன்று நிறைவு பெறுகிறது. ஆளும் அவாமி லீக்கின் வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்ற நிலையில், அக்கட்சி இதுவரை யார் பெயரையும் அறிவிக்கவில்லை.
உணவுப் பொருட்கள் உற்பத்தியில் ஆப்பிரிக்க நாடுகள் அனைத்தும் தன்னிறைவை எட்ட வேண்டும் என்று செனகல் ஜனாதிபதி மாக்கி சால் தெரிவித்துள்ளார். தங்கள் உணவுப் பொருட்கள் தேவைக்கு பெரும்பாலும் பிறநாடுகளையே ஆப்பிரிக்க நாடுகள் நம்பியிருக்கின்றன. இதிலிருந்து விடுபட வேண்டும் என்று செனகல் உள்ளிட்ட பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் விரும்புகின்றன. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த மாக்கி சால், தன்னிறைவு பற்றிக் குறிப்பிட்டி ருக்கிறார்.