states

img

தந்தை பெரியார் சிலைக்கு தமிழ்நாடு முழுவதும் சிபிஎம் மரியாதை

தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மரியாதை செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் தமிழ்நாடு முழுவதும் மரியாதை செலுத்தப்பட்டது.  விருதாச்சலம் நீதிமன்றம் அருகில் உள்ள பெரியார் உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், என்.எஸ்.அசோகன், ஜி.ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வன், மூத்த வழக்கறிஞர் ஏ.சந்திரசேகரன், வட்டக் குழு உறுப்பினர்கள் பெரியசாமி, செல்வகுமார், நகர் குழு உறுப்பினர்கள் கணேசன், செந்தில், சேகர், வேல்முருகன், சத்யா, கிளை செயலாளர்கள் வீரமணி, சட்டநாதன், கோவிந்தராஜ் இதயத்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.