மதுரை, ஜூன் 23- இளைஞர்களின் ராணுவ வேலை வாய்ப்புக் கனவை அழித்து, ராணுவத்தை ஆர்எஸ்எஸ்மயமாக்கும் வகையில் ஒன்றிய மோடி அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் மதுரை - உத்த ரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜ்நகர் (அலகாபாத்) இடையே தனியார் ரயிலை ரத்து செய்திட வலியுறுத்தியும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் - புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் ஜூன் 23 வியாழனன்று மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தப்பட்டது. இதில் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜய ராஜன், எஸ். கே.பொன்னுத்தாய் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சு.வெங்கடேசன் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒன்றிய அரசு பல்வேறு பொதுத்துறை களை விற்பனை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராணுவத்தில் இளைஞர் களை 4 ஆண்டுகள் ஒப்பந்த முறையில் பணிக்கு சேர்க்கும் அக்னிபாதை திட் டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த நாட்டைப் பாதுகாக்கும் ராணுவத்தில் உச்சபட்ச தியாகத்தை கோருகின்ற ராணுவ வேலைவாய்ப்பில் இளைஞர் களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் இல் லாமல் நிர்க்கதியாக மாற்றியுள்ளது.
எனவேதான் வட இந்தியா முழுவதும் இத்திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இளைஞர்களின் வேலைவாய்ப்பை கேள்விக்குறியாக்கும்; நாட்டின் பாது காப்பை கேள்விக்குறியாக்கும் அக்னி பாதை திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கின்றது. அதேபோல் தென்னகத்தில் இருந்து இரண்டாவது தனியார் ரயிலை இயக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மதுரையிலிருந்து உத்தரப்பிரதேசம் பிரக்யாராஜ் நகருக்கு இந்த தனியார் ரயில் இயக்கப்படவுள்ளது. தனியார் ரயில் சேவையினால் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரயில் பய ணத்தில் உள்ள சேவை; திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே ஒன்றிய அரசு, தனியார் ரயில் இயக்கத்தையும், அக்னிபாதை திட்டத் தையும் கைவிட வேண்டும் எனக்கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
போலீஸ் தள்ளுமுள்ளு-கைது
மதுரை கட்டபொம்மன் சிலையில் இருந்து பேரணியாகச் சென்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினர் ரயில் நிலையம் முன்பு தடுப்பு கள் அமைத்து தடுத்து நிறுத்தினர். தடுப்பு களை தாண்டி பலரும் ரயில் நிலைய நுழைவு வாயிலுக்கு சென்று அக்னி பாதை திட்டத்தை எதிர்த்தும் மதுரையில் இருந்து இயக்கப்படும் தனியார் ரயி லைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி னர். இதனால் காவல்துறையினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின ருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட் டது. தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறை யினர் கைது செய்தனர்.