states

500 டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை,ஜூன் 22- தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடை கள் மூடப்பட்டதற்கு மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “தமிழ்நாட்டில் மொத்த முள்ள 5329 மதுக்கடைகளில் 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை  கடைகள் ஜூன் 22 ஆம் தேதி முதல் மூடப்படும் என்று அரசாணை வெளி யிடப்பட்டிருக்கிறது.  அரசின் இந்த அறி விப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், ‘முழு மதுவிலக்கு நமது இலக்கு’ என்ற நோக்குடன் அரசு படிப் படியாக மதுக்கடைகளை மூடி, மது இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கு வதற்கு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், “500  மதுக்கடைகள் மூடப்படுவதாக அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி  அளிக்கிறது. அரசின் இந்நிலை பாட்டை வரவேற்கிறோம். அத்துடன், இனிமேல் புதிய மதுக்கடைகள் ஏதும் திறக்கப்படாது என்பதையும் அறி விக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். சிபிஐ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், “தமிழ்நாடு அரசின் படிப்படியாக மது விலக்கு கொள்கையை அமலாக்கும் முறையில் 500 மதுக்கடைகள் மூடப் பட்டிருப்பதை வரவேற்கிறோம். அரசின் நடவடிக்கை படிப்படியாக மது விலக்கை தொடர்ந்து செயல்படுத்தி பரி பூரண மதுவிலக்கை அரசு அமலாக்கும் என்ற நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கிறது” என்று கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம்  “மதுப்பழக்கம் பல்லாயிரக் கணக்கானோர் வாழ்க்கையை சீரழித்து உள்ளது.தமிழ்நாட்டின் சமூகப் பொரு ளாதாரத்தில் மதுவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அளவீடற்றது. மதுப்பழக் கத்தை கட்டுப்படுத்தும் வகையில், மது க்கடைகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு, நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது பாராட்டுகி றோம்” என்று கமல்ஹாசன் தெரிவித்தி ருக்கிறார்.