states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூா் கெரியில் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி விவசாயி கள் நான்குபேர் மீது காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில், ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் இதே அலகாபாத் உயர்நீதி மன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியது. பாதிக்கப்பட்ட தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவே, உச்ச நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தெலுங்கானாவில் கனமழை: விழிப்புடன் இருக்க உத்தரவு

தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள ஹிமாயத் சாகர் மற்றும் ஒஸ்மான் சாகர் ஆகிய இரு நீர்த்தேக்கங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. திங்கட்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக, மூசி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மூசரம்பாக் பாலம் ஏற்கெனவே வெள்ளத்தில் மூழ்கி வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பாலங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் விழிப்பாக இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் சந்திரசேகர ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

பரூக் அப்துல்லா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கடந்த 2001 முதல் 2012 வரை அந்த மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்தார். அப்போது 2004 முதல் 2009-க்கு இடைப்பட்ட காலத்தில் கிரிக்கெட் சங்கத்தில் ரூ. 43.69 கோடி வரை முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த  மே 31-இல் பரூக் அப்துல்லாவிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினர். தற்போது பரூக் அப்துல்லா மீது காஷ்மீரின் ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஆகஸ்ட் 27 ஆம் தேதி வழக்கு விசா ரணைக்காக பரூக் அப்துல்லா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

மதுவுக்கு பதிலாக கஞ்சா: பாஜக எம்எல்ஏ பரிந்துரை

“மதுபான விற்பனைக்கு பதிலாக கஞ்சாவை பயன்படுத்தி தயாரிக்கப்படும் போதைப் பொருட்களை அனுமதிக்கலாம்” என்று சத்தீஸ்கர் பாஜக எம்எல்ஏ-வும், முன்னாள் சுகா தார அமைச்சருமான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பந்தி கூறியுள்ளார். “கஞ்சாவைப் பயன்படுத்து பவர்கள் கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது அரிதான விஷயம்” என்று,  தான் கஞ்சாவை பரிந்துரைப்பதற்கான காரணத்தையும் கிருஷ்ணமூர்த்தி பந்தி வெளி யிட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “கஞ்சாவை நமது நாட்டில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ விரும்பினால், அவர் பாஜக மத்திய தலைமையிடம் இதுதொடர்பாக கோரிக்கை வைக்கலாம்” என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்கில் மிஜோரம் பாஜக எம்எல்ஏவுக்கு சிறை

மிசோரம் மாநிலத்தில் பாஜக-வுக்கு இருக்கும் ஒரே எம்எல்ஏ புத்த தன் சக்மா ஆவார். இவர்,  முன்பு சக்மா தன்னாட்சி மாவட்டக் கவுன்சிலின் உறுப்பினராக இருந்தபோது, ஆளுநரிடம்  அனுமதி பெறாமல் ஊதியத்தை முன்கூட்டியே எடுத்தது, பொதுப் பணிகளில் முறைகேடு செய்தது  தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் புத்த தன் சக்மா உட்பட 13 பேருக்கும்  தலா ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, மாவட்ட கவுன்சில் உறுப்பினராக இருந்த காலத்தில் நிதிச் சுமை  இருந்தது. அதனால் ஊதியத்தில் ஒரு பகுதியை முன்கூட்டியே பெற்றோம். ஆனால் சட்டப்படி தான் இதனைப் பெற்றிருந்தோம் என்று தன்மீதான குற்றச்சாட்டை பூசி மெழுகியுள்ளார்.

வாக்காளர் அட்டை - ஆதாரை இணைக்க காங்கிரஸ் எதிர்ப்பு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான தேர்தல் சட்டத் திருத்தம் 2021-இன் 4, 5 பிரிவுகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதால், அவற்றை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவை என அறிவிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்பாக திங்க ளன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் தில்லி உயர்நீதி மன்றத்தை அணுகலாம். அங்கு இந்த விவகாரத்துக்குத் தீர்வு கிடைக்கும்’’ என்று கூறிய நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

கடின உழைப்புக்கு கவுரவமான ஊதியம் கேட்பது குற்றமல்ல

தில்லி யூனியன் பிரதேசத்தில் மதிப்பூதியம் கேட்டு 39 நாட்கள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்களை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்  ஆத்மி அரசு, கடந்த மார்ச் 14 அன்று பணிநீக்கம் செய்தது. இதனை காங்கிரஸ் பொதுச்செய லாளர் பிரியங்கா காந்தி கண்டித்துள்ளார். ஆம் ஆத்மி அரசு கடந்த சில தினங்களுக்கு எம்எல்ஏக்  களின் ஊதியத்தை உயர்த்தியது. மறுபுறத்தில், அநீதியான நடவடிக்கையை மேற்கொண்டு, மதிப்பூதியம் கோரிய 800-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்களை அரசு பணிநீக்கம் செய்தது. கடின உழைப்புக்கு நல்ல கவுரவ ஊதியம் கேட்பது குற்றமா? என்று கேட்டுள்ளார்.

அரசியல் லாபத்திற்கு இந்துத்துவா பயன்படுத்தப்படுகிறது!

எனது சிவசேனா இந்துத்துவாவுக்காக அரசியலில் ஈடுபடுகிறது; ஆனால், பாஜக தனது அரசி யல் நலன்களுக்காக இந்துத்துவாவை பயன்படுத்துகிறது என்று மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். தெற்கு மும்பையில் சிவசேனா அலுவலகத்தை திறந்து வைத்து உத்தவ் தாக்கரே உரையாற்றிய போதுதான் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் படத்தை  பயன்படுத்தி வாக்கு கேட்பதை ஏக்நாத் ஷிண்டே நிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு: போக்குவரத்து துணை ஆணையர் சஸ்பெண்ட்

சென்னை,ஜூலை 26- ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் நட ராஜனை பணியிடை நீக்கம் (சஸ்  பெண்ட்) செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலை யில், திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்ட நடராஜன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜன் அலுவலகத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.அந்த சோத னையில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம்,  வரவு - செலவு கணக்கு டைரி பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்  தொடர்ந்து நடராஜன் நெல்லைக்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

விழுப்புரம் மாணவி உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு மாற்றம்

விழுப்புரம்,ஜூலை 26- விழுப்புரத்தில் தற்கொலை முயற்சி யில் ஈடுபட்ட மாணவி மேல் சிகிச்சைக் காக சென்னை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டியிலுள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி திங்களன்று (ஜூலை 25) கல்லூரி முதல் மாடியில் இருந்து விழுந்துள்ள சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தற்கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்துள்ள னர். மாணவி எழுதிய கடிதத்தில் குடும்ப  சூழல் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள் ளதாக காவல் துறையினர் தெரிவித்த னர். அத்துடன் அவருடைய தாயாரின்  வாக்குமூலத்திலும் குடும்ப சூழல்  காரணம் என பதிவு செய்யப்பட்டுள் ளது.  இந்த நிலையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவிக்கு மேல் சிகிச்சை அளிக்க விழுப்புரத்தி லிருந்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ள னர். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,ஜூலை 26- தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும்  கூறியிருப்பதாவது:- கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை ஜூலை 27 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தென் காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருது நகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயி லாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம் பலூர் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு  இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  ஜூலை 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  இவ்வாறு தெரிவித்திருக்கிறது.