கோவையில் எண்ணற்ற தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அத்தகைய போராட்டங்களில் ஒன்று தான் எவரெஸ்ட் இன்ஜினியரிங் தொழி ற்சாலையில் நடைபெற்ற போராட்டம். பொதுத்துறை நிறுவனம் பெல் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு தேவையான உற்பத்தி பொருட்களை, உதிரி பாகங்களை செய்து கொடுப்பதுதான் எவரெஸ்ட் இன்ஜினியரிங் தொழிற்சாலையின் வேலை. வெளியூர்களில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதில் தொடங்கி ஒவ்வொரு விஷயத்திலும் அந்த ஆலை நிர்வாகம் லாபத்தை பெருக்கு வதில் கவனமாக இருந்தது. வழக்கம் போல் நிர்வாகம் தொழிலாளர் களை சுரண்டுவதும், பல்வேறு விதமான மிரட்டல், அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இயல்பாக அங்கு வேலை செய்த தொழிலாளர்களை சங்கமாக அணி திரள வைத்தது. ஓவர் டைம் வேலை என்று சொல்லப்படும் மிகை நேர வேலை செய்ய கட்டாயப்படுத்தினர். நாள் முழுவதும் வேலை செய்த தொழி லாளர்கள் சக்தி இழந்த நிலையில் மிகை நேர வேலையில் நிர்வாகம் வழங்கிய உணவுப்படி யை ரூ.3இல் இருந்து ரூ.5 ஆக உயர்த்தி தரும்படி கேட்கின்றனர்.
தொழிலாளர்களின் இந்த கோரிக்கை நியாயமானது என்ற போதும், எளிதில் நிறை வேற்ற முடியும் இந்த விஷயத்தில் தொழிற் சாலை நிர்வாகம் முரட்டுத்தனமான பிடி வாதத்தை கையாண்டு சிக்கலை ஏற்படுத்தியது. எனவே தொழிலாளர்கள் கோரிக்கையை வெல்ல போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். நிர்வாகம் பிரச்சனையை பேசித் தீர்வு காண்பதற்கு பதிலாக எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல நடந்து கொண்டது. தொழிலாளர் கோரிக்கை யை ஏற்பதை நிர்வாகம் கௌரவ பிரச்சனையாக பார்த்தது. தொழிலாளர்களை ஆத்திரம் ஊட்டுவது, ரவுடிகளைக் கொண்டு ஆலையை இயக்கவும், போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் தொழிற்சங்கத் தலைவர்களை தாக்கவும் திட்டமிட்டு செயல்பட்டது. ஆனால் அனுபவம் மிக்க தலைவர்களின் வழிகாட்டுதலோடு கட்டுக்கோப்பாக அந்தப் போராட்டம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் ஆலைக்குள் ரவுடிகள் கலவரத்தைத் தூண்டி தொழிலாளர் தலைவர்களை தாக்க முயற்சிக்கின்றனர். சமயோசிதமாக செயல்பட்டு அந்த முன்னணி தலை வர்கள் தற்காத்துக் கொள்கின்றனர். எனினும் தாக்குதலில் ஈடுபட்ட ரவுடி உயிரிழந்துவிட்டான். நிர்வாகம், பணபலம் ஆளும் வர்க்கத்தின் விசுவாசம் மிக்க சேவகம் ஆகியவற்றை கொண்டு தொழிலாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்கிறது. மாவட்ட நீதிமன்றத்தில் உண்மையை ஆணித்தரமாக நிரூபித்து தொழிலாளர்கள் விடுதலை பெறுகின்றனர்.
ஆனால் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படுகிறது. அதன் பிறகும் உறுதி குலையாமல் மனம் தளராமல் உச்ச நீதிமன்றம் வரை சென்று இந்த வழக்கை எவரெஸ்ட் தொழிற்சாலையில் சிஐடியு தொழிலாளி வர்க்கம் எப்படி எதிர்கொண்டது?! என்ன நடந்தது என்பதைத்தான் நூலாசிரியர் வேலுச்சாமி இதில் பதிவு செய்திருக்கிறார். சமரசம் அற்ற தொழிலாளி வர்க்கப் போராட்டம் என்பது தான் மிகை நாழி நூலின் மைய அம்சம். எண்பதுகளில் சமூகம் எப்படி இருந்தது என்பதையும் இன்றைய காலகட்டத் தையும் படிப்பவர் மனதில் காட்சியாக விரியும் படி மிக எளிமையாக அழகாக சுருக்கமாக வடித்திருக்கிறார் வேலுச்சாமி. 40 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு போராட்ட வரலாற்றை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது. எவரெஸ்ட் தொழிற்சங்க தலைவராக செயல்பட்ட தோழர் கருப்பையா வின் அனுபவப் பகிர்வை கலந்துரையாடலாக உள்வாங்கி வேலுச்சாமி எழுதியிருப்பது சிறப்பு.
நூல் பெயர் : மிகை நாழி
நூலாசிரியர் : ஆர். வேலுசாமி
பக்கம் : 124
விலை : ரூ.100
வெளியீடு : சிஐடியு,
கோவை மாவட்டக்குழு