கள்ளக்குறிச்சி, ஜூன் 21- கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி மாண வர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் 99 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். ஏ.கே.டி. பள்ளி மாணவி ஜெயஸ்ரீ 12ஆம் வகுப்பு தேர்வில் 594 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளார். இவர் தமிழில் 99, ஆங்கிலம் 97, கணக்கு பதிவி யல் 100, பொருளியல் 98, வணிகவியல் 100, கம்யூட்டர் அப்ளிகேஷன் 100 மதிப் பெண் பெற்றுள்ளார். மாணவி அம்ச வள்ளி தமிழில் 98, ஆங்கிலம் 95, இயற் பியல் 98, வேதியியல் 99, உயிரியல் 100, கணிதம் 100 என 590 மதிப்பெண் பெற்றுள் ளார். மாணவி நவீனா தமிழ் 96, ஆங்கி லம் 97, இயற்பியல் 99, வேதியியல் 100, உயிரியல் 96, கணிதம் 100 என 558 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கிருஷ்ண பிரசாத் தமிழ் 98, ஆங்கிலம் 95. இயற் பியல் 100, வேதியியல் 98, உயிரியல் 97, கணிதம் 100 என 558 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த தேர்வில் 590க்கு மேல் 2 பேரும், 580க்கு மேல் 11 பேரும், 550க்கு மேல் 55 பேரும், 500க்கு மேல் 188 பேரும் மதிப் பெண்கள் பெற்றுள்ளனர். பல்வேறு பாட ப்பிரிவுகளில் 37 பேர் 100க்கு 100 மதிப் பெண் எடுத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்க ளையும், ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் மகேந்திரன்,செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்கு நர் ராஜேந்திரன், முதல்வர் வெங்கட் ரமணன், துணை முதல்வர் ஷர்ப்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.