states

சென்னை, செங்கல்பட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டில் சென்னை, செங்கல் பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கும் சுகாதாரத்துறை செயலா ளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. ஏப்ரல் 15  ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்தது. தற்போது 100 ஆக உயர்ந் திருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நோய்த் தடுப்பு நட வடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில், “பொதுமக்கள் கூடக்கூடிய பொது இடங்களில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை அனைத்து மாவட்ட நிர்வா கங்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். முதல் இரண்டு மற்றும் பூஸ்டர் தடுப்பூ சியை செலுத்தாதவர்களைக் கண்ட றிந்து தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை  எடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களில் அரசின் நிலையான வழிகாட்டுதல்கள் கட்டா யம் கடைபிடிக்க வேண்டும் பரிசோதனைக்கு ஏற்ப தொற்று உறுதியானவர்கள் விழுக்காடு 5 ஆக உயரும் பட்சத்தில் பரிசோ தனை எண்ணிக்கையை தீவிரப்படுத்த  வேண்டும். மருத்துவ கட்டமைப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வருகின்ற 12 ஆம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை பயன் படுத்தி தடுப்பூசியை செலுத்த தவறியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். அரசு சார்பில் ஏற்கெனவே வழங் கப்பட்டுள்ள கொரோனா வழிகாட்டு தல்களை முறையாக மாவட்ட நிர்வாகம் கண்காணித்து தொற்று பரவலை  தடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.