கோவை, நவ.27- கர்நாடக மாநிலம் மங்களூரில் நவம்பர் 19-ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முகமது ஷாரிக் கர்நாடகாவில் பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்ற திட்டமிட்டு இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. மற்றும் மங்களூரு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கி டையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷாரிக், கோவை வந்து விடுதியில் தங்கி புதிய சிம்கார்டு வாங்கியது டன், பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மங்களூரு காவல்துறையினர் கோவைக்கு வந்தனர். ஷாரிக் தங்கிய விடுதிக்கு கோவை மாநகர காவல்துறையினருடன் சென்ற மங்களூரு காவல்துறையினர் விடுதி முழுவதும் சோதனை மேற்கொண்டனர். மேலும் ஷாரிக் செல்போன் தொடர்பில் கோவை நபர்கள் சிலர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அது தொடர் பாகவும் விசாரித்தனர். விடுதியையொட்டி இருந்த பகுதி களில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி சென்றனர். இந்த நிலையில், மங்களூரு குண்டு வெடிப்பு தொடர் பாக விசாரிப்பதற்காக கோவையில் ஷாரிக் தங்கிய விடுதி உரிமையாளர் காமராஜூக்கு மங்களூரு காவல்துறை யினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இதை தொடர்ந்து விடுதி உரிமையாளர் காமராஜ் மங்களூரில் உள்ள காவல் நிலையத்தில் திங்களன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.