சென்னை, மார்ச் 6- ஹத்ராஸ் தலித் பெண் கும்பல் பாலியல் வன்கொடுமை படுகொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்து அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மேல் முறையீடு செய்திட வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த 2020 செப்டம்பரில் 19 வயது தலித் பெண் தாக்கூர் சாதியவாதிகள் நான்கு பேரால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட கொடூரம் தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வழக்கின் தீர்ப்பு சில தினங்களுக்கு முன்பு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தால் வழங் கப்பட்டது. குற்றவாளிகளில் சந்தீப் தவிர ரவி, லவகுஷ், ராம்குமார் ஆகிய மூன்று குற்றவாளி களையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு தண் டிக்கப்பட்ட சந்தீப்பும் கொலை செய்யும் நோக்கு டன் தாக்கவில்லை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற் படுத்துகிறது. குற்றவாளிகள் நான்கு பேரும் தன்னை வன்கொடுமை செய்து, கொடுங்காயப்படுத்தி யதாக இறப்பதற்கு முன்பு அலிகார் மாவட்ட நீதிபதிக்கு முன்பு அப்பெண் மரண வாக்குமூலம் அளித்திருந்தும் நீதிமன்றம் அவரது மரண வாக்கு மூலத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. வழக்கின் துவக்கத்தில் இருந்தே உத்தரப்பிரதேச பாஜக அரசு படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணிற்கு எதிராகவே நடந்து கொண்டு இறுதி வரை குற்றவாளிகளைப் பாதுகாத்துள்ளது. மேலும் இப்பகுதியில் தாக்கூர் சமூகத்தினர் தலித்துகளை தாக்கும் சூழ்நிலை நீடிப்பதால், சிஆர்பிஎப் பாதுகாப்பும் நீடிக்கிறது. எனவே, உறவினர்களை சந்திப்பதோ, வேலைகளுக்கு செல்வதோ இன்றுவரை சாத்தியமற்று இருக்கி றது. குழந்தைகள் பள்ளிகளுக்கும் செல்லமுடிய வில்லை என்ற துயர நிலையே இன்று வரை நீடிக்கிறது. எனவே, சிபிஐ உடனடியாக மேல் முறையீட்டுக்கு செல்ல வேண்டும். மேல் முறை யீடு விசாரணை வேறொரு மாநிலத்தின் உயர்நீதி மன்றத்தால் நடத்தப்பட வேண்டும். உடனடியாக குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியை வழங்க வேண்டும். அந்த குடும்பத்தில் உள்ள குழந்தை கள் பள்ளிக்கு செல்வதற்கான ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.