கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து தனது இல்லத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்திலிருந்து, அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஸ், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.