states

img

மாணவர் சின்னதுரைக்கு ஆறுதல்

நாங்குநேரியில் சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட சக மாணவர்களால் தாக்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னதுரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோரை செவ்வாயன்று நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், பி.கற்பகம், மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் ஆகியோர் உடனிருந்தனர்.