states

தெலுங்கானாவில் நிர்மலா சீதாராமனின் வாகனத்தை நிறுத்தி காங்கிரசார் மறியல்!

ஹைதராபாத், செப். 1 - ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கானா மாநிலம் காமாரெட்டியில் பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை, அவர் ஜஹீராபாத்திலிருந்து காம ரெட்டி மாவட்டத்தில் உள்ள பன்ஸ்வாரா வுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி, இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் பிரிவினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாரா மனின் கார் உட்பட பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் நின்றன. இது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, சம்பவ இடத்திற்கு திரண்டு  வந்த பாஜக நிர்வாகிகள் காங்கிரசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிதியமைச்ச ருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி னர். ஒருகட்டத்தில் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், காங்கிரஸ் மற்றும்  பாஜக தொண்டர்கள் பலர் காயமடைந்த னர். போலீசார் தலையிட்டு இரண்டு தரப்பின ரையும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி னர். நிர்மலா சீதாராமனுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து, காமரெட்டி மாவட்டம் சென்றடைந்த ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்குள்ள நியாய விலைக் கடைகளுக்குச் சென்று, கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இல்லையே ஏன்? என்று குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அவர்களிடம் இருந்து திருப்திகரமான பதில் கிடைக்காததால், அதிகாரிகளிடம் விவரங்களைக் கண்டறிந்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.