சென்னை,ஜூன் 20- அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம்-எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் முற்றி வரு கிறது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி யுள்ளார். கட்சியின் நலன் கருதி 23 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள செயற் குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்கலாம் என்றும் அடுத்த கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை இருவரும் கலந்து ஆலோ சித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் அதில் கூறியுள்ளார். இதனையடுத்து எடப்பாடி பழனி சாமி தரப்பில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப் பாளர் கே.பி.முனுசாமி, “ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் குறித்து எங்களு க்கு எதுவும் தெரியாது என்றும் திட்ட மிட்டபடி 23 ஆம் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்” என்றார்.
மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பி வைத்திருக்கிறோம். பொதுக் குழுவில் என்ன தீர்மானம் கொண்டு வருவது என்பது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபி எஸ் கலந்து கொண்டதாகவும், இதற் கான ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்ப டுமா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது, பொதுக் குழு வில் எடுக்கும் முடிவுகளை ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு தலைவர்களும் ஏற்றுக் கொள் வார்கள் என்றும் முனுசாமி கூறினார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெய குமார்,“நான் ஓபிஎஸ்-இபிஎஸ் இரு வருர் பக்கம்மும் இல்லை. தொண்டர் கள் பக்கம் நிற்கிறேன் என்றும் கட்சி யில் ஒற்றைத் தலைமை என்பது காலத் தின் கட்டாயமாகும். இதை தவிர்க்க முடியாது. தொண்டர்கள்தான் பொதுச் செயலாளரை முடிவு செய்வார்கள் என்றும் கூறினார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பன்னீர்செல்வம், எடப்பாடி ஆதரவாளர்கள் இடையே கருத்து மோதல் மேலும் வலுத்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடந்த திருப்பத்தூர் மாவட்ட அதிமுக கூட்டத்தில் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும். அதனை எடப்பாடி பழனி சாமி ஏற்றுநடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு கூட்டத்திற்கு இன்னும் ஒரிரு நாட்களே இருப்பதால் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் முற்றியுள்ளது.