சென்னை, ஏப். 20 - சென்னை ஐஐடி-யில் மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவி பி.எச்டி படித்து வந்தார். ஐஐடி விடுதியில் தங்கி இருந்த அவரை, சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்தும் உரிய பிரிவுகளில் வழக்கு பதியப்படவில்லை. குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் தலையிட்ட பிறகு, வழக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் மாற்றி பதியப்பட்டது. மேலும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான வேதியியல் துறையை பேரா. ஜி. எடமன பிரசாத், ரமேஷ் எல். கர்தாஸ் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் புதனன்று (ஏப்.20) விசாரித்தார். அப்போது காவல்துறை தரப்பில், காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரி விக்கப்பட்டது. இருப்பினும், சிபிசிஐடி காவல்துறையிடம் சொல்லாமல் தமிழகத்தை விட்டு செல்லக் கூடாது. பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல நேரிட்டால் விசாரணை நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் செல்லக்கூடாது என்று நிபந்தனைகளை விதித்து இரு பேராசிரியர்க ளுக்கும் நீதிபதி முன் ஜாமீன் வழங்கினார்.