சென்னை, அக்.5- நந்தனார் பிறந்த நாளில் பட்டிய லின மக்களை அவமதித்த தமிழ்நாடு ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: கடலூர் மாவட்டத்தில், நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம் உள்ளது. அங்கு ஆர்.எஸ்.எஸ். சார்பு சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நந்தனார் பிறந்த நாள் நிகழ்வில் பட்டியலின மக்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு நடத்தப்பட்டதும் அதில் ஆளுநர் பங்கேற்றதும் கடும் கண்ட னத்திற்குரியதாகும். நிலவுடைமையாளரிடம் வேலை செய்த நந்தனாருக்கு பிறப்பின் அடிப் படையில் வழிபாட்டு உரிமை மறுக்கப் பட்டதும், சிதம்பரம் நடராசர் சன்னதி யில் நுழைய விரும்பிய அவரை நெருப் பில் ஐக்கியமாக்கியதுமே வரலாறாக உள்ளது. அவரை தீயிட்டுக் கொளு த்திய கொடிய சாதிய வன்மம் கொண்ட கூட்டத்தின் கருத்தையே, இப்போது பட்டியலினருக்கு அவரது பிறந்த நாளில், அவரது மண்ணில்பூணூல் அணிவிப்பதன் மூலம் மீண்டும் ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளார்.பிறப்பின் அடிப்படையில் உயர்வு கற்பித்தலை நியாயப்படுத்துவது நந்தனாரை அவமதிக்கும் செயலாகும். இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்த தன் மூலம், ‘பூணூல் தான் புனி தத்தின் அடையாளம்’ என நிலைநாட்ட விரும்பும் கூட்டத்தினர் ‘பொதுவாகவே அனைத்து மனிதர்களும் சமம்’ என்ற அரசமைப்பு சட்ட விழுமியத்திற்கு எதிராகவே உள்ளனர். ஆளுநர் ஆர். என்.ரவியும் இந்த நிகழ்ச்சியின் அங்க மாக இருந்துள்ளார். ஒடுக்கப்பட்ட அடித் தட்டு மக்களை இழிவுபடுத்தும் இந்தச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மை யாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.